tamilnadu

img

‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’: குழந்தைகளிடம் காவல்துறை புதிய முயற்சி

சிதம்பரம், மே 10 - ஒரு கதை சொல்லட்டுமா சார் என்ற தலைப்பில் பரங்கிப்பேட்டை காவல் நிலை யத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குழந்தை களுக்கு போட்டி நடைபெற்றது. கொரானா-வினால் வீட்டிலேயே இருக்கும் குழந்தைகள் தங்களது திற மையை, கற்பனைத் திறனை வெளிக் கொண்டு வரும் பொருட்டு ஆன்லைன் மூல மாக இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல குழந்தைகள் கலந்துக்கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர் போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரங்கிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிச்செல்வி மற்றும்  உதவி ஆய்வாளர் ஆனந்தன் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.