tamilnadu

img

போட்டியின் நடுவே குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய வீராங்கனை

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்டர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த தொடரின் முக்கியமான ஆட்டத்தில் (லோக்கல் அணி) உள்ளூர் வீராங்கனை லால்வெண்ட் லுவாங்கி 7 மாத கைக்குழந்தையுடன் வந்திருந்தார்.  ஆட்டத்தின் பாதி நேர இடைவேளையின் போது தனது குழந்தைக்குத் தாய்ப்பால் வழங்கி மீண்டும் போட்டியில் கவனம் செலுத்தினார்.  இதனை நிங்க்லுன் ஹங்கல் என்ற ரசிகர் இணையத்தில் பதிவிட டாப் டிரெண்டிங்கில் இன்று  வரை சுழன்று வருகிறது. ஆன்லைன் ஆர்மிகள் மீம்ஸ் தயாரித்து கொண்டதுடன் பாராட்டி வருகின்றனர்.  மகளிர் அமைப்புகள் முதல் சராசரி மனிதன் வரை மிசோரம் வீராங்கனை யின் தைரியமான தாய்மையை பாராட்டி  வருகின்றனர். மாநில  விளையாட்டு அமைச்சர் ஒருபடி  மேலே சென்று லால்வெண்ட் லுவாங்கிக்கு ரூ.10,000 பரிசு மற்றும் இதர சலுகை அளித்துள்ளார்.