tamilnadu

சேலத்தில் 22 கிலோ தங்கம் பறிமுதல்

சேலம், ஏப். 4-

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஏற்காடு சட்டமன்றதொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராம்தாஸ் தலைமையிலான குழுவினர் வியாழனன்று காரிப்பட்டி சுங்கசாவடி அருகே வாகன தணிக்கை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த வழியாகவந்த வேனை சோதனை செய்தனர். அதில் 22 கிலோதங்க நகைகள் இருந்தது. சேலத்தில் உள்ள தனியார்நகைகடைக்கு கொண்டுசெல்வதாகவும் தெரிவித்தனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தேர்தல்அதிகாரி மணிமேகலையிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து தொடர்ந்துஆய்வு செய்து வருகின்றனர்.

;