போக்குவரத்து நெரிசல்: விமானங்கள் தாமதமாக புறப்பாடு
சென்னை, ஆக.22 சென்னை பல்லாவரம் அருகே வெள்ளியன்று (ஆக.22) காலை ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரி சல் காரணமாக ஏராளமான வாகனங்கள் சாலையில் வரி சையாக நின்றன. இதில், விமானத்தில் பயணிப்பதற்காக புறப்பட்ட ஏராளமான பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். பேருந்து விபத்தால் 3 கி.மீ தூரம் நெரி சல் ஏற்பட, விமான நிலை யம் செல்வோர் உடனடி யாக தாங்கள் புக் செய்த விமான நிறுவனங்களுக்கு தகவல் கூறியுள்ளனர். இந்நிலையில், பயணி களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, போக்கு வரத்து நெரிசலில் சிக்கிய பயணிகளின் வசதிக்காக 10க்கும் மேற்பட்ட விமா னங்கள் தாமதமாக புறப் பட்டன என்று விமான நிலைய அதிகாரிகள் தெரி வித்தனர்.