திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் காரில் உதகைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் அவிநாசியை அடுத்த பழங்கரை அருகே வியாழக்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 3 பேர் அவிநாசி, கோவை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.