tamilnadu

img

10வது நாளாக சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அனைத்து தொழிற்சங்க ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு ; தலைவர்கள் கைது!

சென்னை, செப். 18 - கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங் களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்து ள்ளார்.

திருபெரும்புதூரில் செயல்படும் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணி யாற்றும் தொழிலாளர்களில் 90 விழுக் காட்டினர் செப்.9ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேரம் பேசும் உரிமை மற்றும் பெரும்பான்மை சங்கத்துடன் நிர்வாகம் பேச வேண்டும், இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களை மதிக்கவேண்டும் என வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இதனையொட்டி செப்.16 அன்று காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு  கொடுக்க தொழிலாளர்கள் ஊர்வல மாக செல்ல இருந்த நிலையில் சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். ஊர்வலத்திற்கு வந்த தொழி லாளர்களையும் ஆங்காங்கே கைது செய்தனர். தொழிலாளர் நலத்துறை நிர்வாகத்தின் நிர்பந்தத்திற்கு பணிந்து அதற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சாம்சங் தொழிலா ளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார் கைது செய்ததை கண்டித்தும், மாநில அரசு தலையிட்டு வேலை நிறுத்தத்தை முடி வுக்கு கொண்டு வரக் கோரி புதனன்று  (செப்.18) சென்னை வள்ளுவர் கோட் டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு (தொமுச, எச்எம்எஸ், ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 12 சங்கங்கள்) அழைப்பு விடுத்திருந்தன.

தலைவர்கள் கைது

இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், தொழிலா ளர்களை வளைத்து வளைத்து கைது செய்தனர். போராட்டத்திற்கு வந்த சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன், துணைப்பொதுச் செயலா ளர் எஸ்.கண்ணன், நிர்வாகிகள் ஏ. கிருஷ்ண மூர்த்தி, கே.திருச்செல்வன், கே.சி.கோபிகுமார், சி.திருவேட்டை, மணிமேகலை, ஏஐடியுசி பொதுச்செய லாளர் ராதாகிருஷ்ணன், ஏஐயுடியுசி தலைவர் சிவக்குமார், எல்டியுசி தலைவர் முனுசாமி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலைநிறுத்தம் ஏன்?

அப்போது செய்தியாளர்களிடம் சிஐடியு மாநிலத் தலைவரும், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் கவு ரவ தலைவருமான அ.சவுந்தரராசன் கூறியதாவது:

சாம்சங் நிறுவனத்தில் 10 நாட்க ளாக வேலைநிறுத்தம் நடக்கிறது. தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ளும் உரிமைக்காக வேலைநிறுத்தம் நடை பெறுகிறது. 16 ஆண்டுகளாக தொழிலா ளர்கள் தொழிற்சங்கம் இல்லாமல்தான் இருந்தார்கள். நிர்வாகம் சொல்வதை கேட்டு நடந்தார்கள். நிர்வாகத்தின் கொடுமை தாங்க முடியாமல் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை அமைத்தனர். அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைப்படி அமைத்த சங்கத்தை ஏற்க முடியாது.  கூட்டுபேரஉரிமையை அனுமதிக்க முடியாது என்று நிர்வாகம் நிலை எடுத்தது; சங்கத்தில் சேர்ந்தவர்களை பழிவாங்கியது. அதனால் வேலைநிறுத்தம் தொடங்கியது.

இந்த சங்கத்திற்கு பதிவு கேட்டு அரசிடம், தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்துள் ளோம். விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் சங்கத்தை பதிவுசெய்து தர வேண்டும் என்பது சட்டம்.

ஆனால், 90 நாட்களாகியும் பதிவுசெய்து தராமல் தாமதம் செய்கின்றனர்.

காவல்துறை அத்துமீறல் 

இந்த நிலையில், தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த அனுமதி  கேட்டால் கூட தர மறுக்கின்றனர். அனுமதிக்கப் பட்ட இடங்களை தடை செய்த பகுதியாக அறி வித்து தொழிலாளர்களை சேரவிடாமல் கைது செய்கின்றனர். செப். 16ந் தேதி காஞ்சிபுரத்தில் சிஐடியு தலைவர் முத்துக்குமார் உட்பட சுமார் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம்

அருகே போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடம். இங்கே போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். அனுமதி மறுத்து வரவர தொழி லாளர்களை கைது செய்கின்றனர். ஆர்ப்பாட்டம், போராட்டம் இல்லை திரும்பிச் செல்லுங்கள் என்று தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்க கூட தலைவர்களுக்கு அனுமதி தராமல் கைது செய்கிற அத்துமீறல் நடக்கிறது. இதனை ஏற்க முடியாது.

சங்கம் அமைப்பது குற்றமா?

அரசு உடனடியாக சாம்சங் தொழிற்சங்கத்தை பதிவை செய்துதர வேண்டும். பதிவு செய்த, பெரும்பான்மை சங்கத்தோடு நிர்வாகம் பேச வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண முன்வர வேண்டும் என நிர்வாகத் திற்கு அரசு அழுத்தம் தர வேண்டும். மாறாக, சட்ட  உரிமை கோரும் தொழிலாளர்களை மிரட்டவும், அச்சுறுத்தவும், கைது செய்யவும் கூடாது. அவ்வாறு செய்வது முழுக்க முழுக்க கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான நட வடிக்கையாக தொழிற்சங்க கூட்டமைப்பு கருது கிறது. இது மிகமிக தவறான, கண்டத்திற்குரிய நடவடிக்கை. முதலாளிகளுக்கு எதிராக ஒரு சங்கம் அமைப்பதையே சமூக விரோத குற்றம்போல் அரசு கருதுவதுவருந்தத்தக்கது.

எச்சரிக்கை

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கலந்து பேசித்தான் இந்த போராட்டத்தை அறிவித்தார்கள். அதற்கு அரசு அனுமதி மறுத்து கைது செய்துள்ளது. அனைத்து சங்கங்களும் மீண்டும் கூடி தமிழகம் முழுவதுமோ அல்லது வேறு வகையிலான போராட்டங்களை நடத்த  நடவடிக்கை எடுப்பார்கள். வாலிபர், மாணவர் சங்கங்கள் உள்ளிட்டு அனைத்து சகோதர சங்கங்களும் இதற்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுக்கிற நிலை உருவாகும் என்பதை அரசுக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன். எனவே, இந்த பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும்.

இத்தகைய அத்துமீறலை அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் கண்டிக்க வேண்டும். அரசின் போக்கை மாற்றிக் கொள்ள அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.