“அதிமுக - பாஜக கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டாலும், அதிமுகவுக்கு வாக்களிப்பது, பாஜகவுக்கு வாக்களிப்பது ஆகிய இரண்டுமே ஒன்றுதான். மக்களுக்கு எதிரான சட்டம் எனத் தெரிந்தும் பாஜக கொண்டுவந்த சிஏஏ சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது. தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்காத ஒன்றிய அரசு, பிரதமர் மோடிக்கு எதிராக இப்போதுவரை எடப்பாடி பழனிசாமி போராடவில்லை” என்று கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.