ஐயஞ்சேரி ரேவதிபுரத்தில் மழை நீர் தேங்கி அவதி
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுக்கா ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயஞ்சேரி ரேவதிபுரம் ஒன்றாவது தெருவில் மழை நீர் தேங்கி வெளியேற முடியாமல் மக்கள் வந்து நடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் இடத்தில் முறையிட்டும் இதனால் வரை சரி செய்யப்படவில்லை இதனால் சாலையை மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாமல் கடந்து செல்லவும் வாகனங்கள் செல்லவும் முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
