tamilnadu

img

2,000 பேருக்கு பட்டா வழங்கிய அமைச்சர் உதயநிதி

சென்னை, ஜூலை 23- வடசென்னை மாவட்டம், மாதவரம்  தாலுகாவிற்கு உட்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி புழல் சூரப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் செவ்வாயன்று (ஜூலை 23)  நடைபெற்றது.

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு  மாதவரம், பெரம்பூர், மயிலாப்பூர், ஆர்.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 2,124 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு,  மா.சுப்பிரமணியம், எஸ்.முத்துசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம் ஜே.ஜே.எபிநேசர், ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், மேயர்  ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், வருவாய் மற்றும் பேரிடர் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா,  சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி  சித்தார்த் ஜகடே உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.