tamilnadu

img

திருநெல்வேலி சிபிஎம் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம்

சென்னை, ஜூன் 25 - சாதி மறுப்புத் திருமணத் தம்பதி களுக்கு பாதுகாப்பு அளித்த தற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகம் மீதும், கட்சித் தலை வர்கள் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டது.

இச்சம்பவம் குறித்து, தமிழ்நாடு சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னர்கள் நாகை மாலி, எம். சின்ன துரை, செ. ராஜேஷ்குமார் (காங்கி ரஸ்), வானதி சீனிவாசன் (பாஜக), சிந்தனைச் செல்வன் (விசிக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), டி.ராமச்சந்திரன் (சிபிஐ), வேல்முரு கன் (தவாகா), எம்.எச். ஜவாஹி ருல்லா (மமக) ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதைச் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானமாக எடுத்துக்கொண்ட பேர வைத் தலைவர் மு. அப்பாவு விவாத த்திற்கு அனுமதித்தார். அப்போது தலைவர்கள் பேசியதாவது :

பாதுகாப்பு வழங்க வேண்டும்! 

தி. வேல்முருகன் (தவாக) :  காதல் திருமணத்தை நடத்தி வைத்த தற்காக ஒரு தேசியக் கட்சியின்  அலுவலகத்தின் மீது நடத்தப் பட்டிருக்கும் இந்த தாக்குதல் சம்ப வத்தை கடுமையாக கண்டிக் கிறேன். தொழிலாளர்கள் உள்ளிட்ட  அனைத்து தரப்பு மக்களுக்காக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது நடத்திய தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தா லும் கைது செய்து சட்டத்தின் முன்  நிறுத்த வேண்டும். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். 

சிறப்பு சட்டம்  கொண்டு வர வேண்டும்! 

எம்.எச். ஜவாஹிருல்லா: நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். எனவே, அந்த அலுவலகத்துக்கும் மாவட்டச் செயலாளருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப் பட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்  நான்கு பேருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் ஆணவக் கொலை களை தடுக்கவும் சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.

வேதனையும் - வருத்தமும்!

சதன் திருமலைக் குமார் (மதிமுக): சாதி மறுப்பு திருமணம்  செய்து வைத்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது  நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்ப வம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.  மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் சில சமூக விரோதிகளால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர், அவரது மனைவிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் யாராக இருந்தாலும் அடக்க வேண்டும், ஒடுக்க வேண் டும். இது போன்ற சம்பவங்களில் ஈடு படும் கும்பல் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

அரசு வேலைவாய்ப்பு  கானல் நீரானது

ம. சிந்தனைச் செல்வன் (விசிக): ஒரே சமயத்தைச் சேர்ந்தவர் களுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மீது தாக்குதல் மற்றும் வன்முறை வெறியாட்டம் நடத்தி இருப்பது மிகுந்த மன வேத னை அளிக்கிறது. இனி இது  போன்ற சம்பவங்கள் நடைபெறா மல் இருக்க அரசு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பது கானல் நீராகி வருகிறது. எனவே இதற்கு புத்துயிர் தர வேண்டும். மேலும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட குழந்தைகளின் நலனுக்காக தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.

இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்! 

டி. இராமச்சந்திரன் (சிபிஐ): அடைக்கலம் தேடி வந்ததால் திரு மணம் நடத்தி வைத்ததால் ஆத்திர மடைந்த சாதி வெறியர்கள் சாதி சங்கத் தலைவர்கள் வன்முறை வெறியாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தை சூறையாடியதும் தோழர்கள் மீது தாக்குதல் நடத்தி யதும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்ப வத்தில் அனைவருக்கும் உரிய  தண்டனை பெற்றுத் தர வேண்டும். சாதி மறுப்பு மற்றும் கலப்புத் திரு மணம் செய்து கொள்ளும் தம்பதி களை படுகொலை செய்யும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். 

குரல் கொடுப்போம்! 

வானதி சீனிவாசன் (பாஜக): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நெல்லை மாவட்டக்குழு அலுவல கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்  கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயக மாண்பு களை காப்பாற்ற பாஜக எந்த நேரத்தி லும் குரல் கொடுக்கும்.

ராஜேஷ்குமார் (காங்.): நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்ப வமும் கட்சித் தோழர்கள் மீது  நடத்திய தாக்குதல் சம்பவமும்  கண்டிக்கத்தக்கது. இந்த சம்ப வத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் பாரா ட்டத்தக்கது. மேலும் இந்த சம்பவத் தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உளவுத்துறை சிறப்பாக செயல்பட வேண்டியது அவசிய மாகும்.  இவ்வாறு தலைவர்கள் பேசினர்.

பாமக, கொமதேக உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்கவில்லை.

சிபிஎம் அலுவலகத்தைத் தாக்கிய  அனைவரையும் கைது செய்க!

சட்டப்பேரவையில் நாகை மாலி எம்எல்ஏ

சாதி மறுப்புத் திருமணத் தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளித்ததற்காக, நெல்லை மாவட்ட சிபிஎம் அலுவலகம் மீதும் கட்சித் தலைவர்கள் மீதும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் பெற்றோர், சகோதரன், உறவினர், சாதி வெறியர்கள், சாதிச் சங்கத் தலைவர்கள்

அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ் வாய்க்கிழமை (ஜூன் 25) கேள்வி நேரம்  முடிந்ததும், திருநெல்வேலியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு அலுவலகம் தாக்கப் பட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த  விவாதத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலை வர் நாகை மாலி பேசியது வருமாறு:

திருநெல்வேலி மாவட்டம், பெரு மாள்புரம் பகுதியைச் சேர்ந்த இடைநிலை  சாதியைச் சார்ந்தவர்- முருகவேல் - சரஸ்  வதி தம்பதியினரின் மகள் 23 வயதுடைய  உதய தாட்சாயினி. இவரும் பாளை யங்கோட்டை நம்பிக்கை நகர் பகுதி அருந்  ததியர் சமூகத்தைச் சேர்ந்த ராமு - சேர்மக்  கனி தம்பதியினரின் 24 வயது மகன் மதன்  குமார். இருவரும் கடந்த 6 வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.  இந்த விவரம் பெண்ணின் தாயாருக்கு  தெரியவந்ததும், அடித்து துன்புறுத்தியுள்ளார்.

சாதி மறுப்புத் திருமணம்

இதையடுத்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த தக வலை தெரிந்து கொண்ட பெண்ணின் சகோ தரன், தாய் மற்றும் உறவினர்கள் மிரட்டி யுள்ளனர். பிறகு, தனக்கும் மதனுக்கும் தனது குடும்பத்தினரால் ஆபத்து ஏற்படும்  என்பதை உணர்ந்த தாட்சாயினி, உயி ருக்குப் பயந்து ஜூன் 12 அன்று வீட்டை  விட்டு வெளியேறி மதன் குமாருடன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவர்களைத் தொடர்பு கொண்டு திருமணத்திற்கு உதவி கோரி னர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த  கட்சித் தலைவர்கள் ஜூன் 13 அன்று சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் சீர்திருத்த திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும், ஜூன் 14 அன்று முறைப்படி, பதிவு திரு மணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

சூறையாடிய சாதி வெறியர்கள்

இந்த தகவலை அறிந்து கொண்ட பெண் வீட்டார், சாதி வெறியர்கள், சாதி சங்க தலைவர்கள் எங்கள் கட்சியின் அலு வலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி னர். அலுவலகத்திற்குள் இருந்த கட்சி  தலைவர்களையும் கடுமையாக தாக்கி னர். பொருட்களை அடித்து சூறையாடினர்.

கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய பெண் ணின் தாயார், சகோதரர், உறவினர்கள், சாதிச் சங்கத்தை சேர்ந்த பந்தல் ராஜா,  ஜெயக்குமார், புல்லட் ராஜா உட்பட அனை வரையும் கைது செய்ய வேண்டும். சட்டத்  தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்  தர வேண்டும்.

ஆணையரின் பாராட்டத்தக்க பணி

இந்த சம்பவத்தில் காவல் ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் பணி பாராட்  டுக்குரியது. ஆனால், காவல் துறையில்  இருந்தே சாதி சங்கத் தலைவர்களுக்கு சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கீழ்மட்ட காவலர்களின் பணி என்பது சற்று வருத்தத்தை அளிக்கி றது. இது குறித்து முதலமைச்சர் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

மணமக்கள் மதன்குமார் - உதய தாட்சாயினிக்கு உரிய முறையில் சட்டப் பூர்வ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து  கொடுக்க வேண்டும். பெண்ணின் தந்தை  முருகவேல், சகோதரன் சரவணகுமார், தாயார் சரஸ்வதி, சாதி சங்கத் தலைவர் கள் பந்தல் ராஜா ஆகியோரின் தொலை பேசியை, சம்பவத்திற்கு முன்பும், பின்பும்  ஆய்வு செய்து அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

மாவட்டச் செயலாளருக்கும் மிரட்டல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகம், மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், அவரது மனைவி மற்றும் குடும்பத்திற்கு காவல்  துறையினர் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மாவட்டச் செயலாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி வரும் சாதிவெறியர்கள் மீது  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அனை வர் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த  காவல் துறையினர் மீது உரிய நட வடிக்கை வேண்டும் என்று முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கிறேன்.

இவ்வாறு நாகைமாலி பேசினார்.