tamilnadu

img

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்பிலான பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புலான 4 கிலோ தங்கத்தைச் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை விமானநிலையத்திற்குத் துபாயில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த விக்னேஸ்வரன் ராஜா (35) என்ற பயணியை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த கைப்பையைச் சோதனை செய்த போது, காப்பி மேக்கர் இயந்திரம் ஒன்று இருந்தது.

அந்த காபி மேக்கர் இயந்திரம் வழக்கத்தைவிட எடை அதிகமாக இருந்ததால், அதனைத் திறந்து பார்த்தனர். அதில், ரூ.2.61 கோடி மதிப்பிலான 4 கிலோ எடை கொண்ட இரண்டு தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்