tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு
சென்னை, மார்ச் 6- சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்  கில் 2023 ஜூன் 14  அன்று அமைச்ச ராக இருந்த செந் தில் பாலாஜியை, அமலாக்கத் துறை கைது செய்தது. அன்றிலிருந்து கடந்த 8 மாதங்களாக அவர் சிறைவாசம் அனுபவித்து வரு கிறார். இதுவரை 23 முறை அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், புதனன்று சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.  அல்லி முன்பு, காணொலி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.  அப்போது, அவரது காவலை 24-ஆவது  முறையாக நீட்டித்து நீதிபதி எஸ்.  அல்லி உத்தரவிட்டார். வழக்கிலிருந்து  தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மார்ச் 11  அன்று விசாரிக்கப்பட உள்ளது.

அதிமுக அணியில்  ஐக்கியமான கதிரவன்
சென்னை, மார்ச் 6 - பிரதான அரசி யல் கட்சிகள் எது வும் கூட்டணிக்கு வராத நிலையில், அதிமுக தலை வர்கள் பல்வேறு சலுகைகளை அறி வித்து, கூட்டணிக்கு கட்சிகளைப் பிடிக் கும் வேலையில் இறங்கியுள்ளனர். இந்  நிலையில், அகில இந்திய பார்வர்ட்  பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலா ளர் பி.வி. கதிரவன், சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமியை சந்தித்து அதிமுக கூட்ட ணியில் ஐக்கியமாகி உள்ளார்.

ஆதீனத்திற்கு மிரட்டல்:  3 பேரின் மனு தள்ளுபடி
மயிலாடுதுறை, மார்ச் 6 - மயிலாடுதுறையில் உள்ள தரும புரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்  றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாகவும்,  அதனை வெளியிடக் கூடாது என்றால் ரூ.  40 கோடி தரவேண்டும் என்று மிரட்டிய தாகவும், பாஜக மாவட்டத் தலைவர்  அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு  பதிவு செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்  யப்பட்டனர். இவர்களில் குடியரசு, ஸ்ரீநிவாஸ், வினோத் ஆகிய 3 பேர் ஜாமீன்  கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.