ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
சிதம்பரம், ஜூலை 19- சிதம்பரம் மேலவீதியில் உள்ள ஆறுமுக நாவலர் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி விழாவில் 12ஆம் வகுப்பு மாணவர் ராமேஸ்வரம் தலைமை தாங்கினார். மாணவி கிருத்திகா வரவேற்றார். மாணவி கலை மதி முன்னிலை வகித்தார். ‘கல்வி வளர்ச்சியில் காம ராஜரின் பங்கு குறித்து மாணவன் குரு சந்திரன் பேசினார். விழாவை மாணவி லக்ஷனா தொகுத்து வழங்கினார். மாணவி மகேஸ்வரி நன்றி கூறினார். பள்ளியின் செயலாளர் அருள்மொழி செல்வன் வாழ்த்துரை வழங்கினார். சிதம்பரம் வீனஸ் குழும பள்ளிகளின் தாளாளர் எஸ்.குமார் கலந்து கொண் டார். இதில் கிரீடு தொண்டு நிறுவன செயலாளர் நடன சபாபதி, ரொட்டேரியன் மகபூப் உசேன் புலவர் ராகவன், பள்ளித் தலைமை ஆசிரியர் ராம்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.