சென்னை
தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 4,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,298 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 87,235 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து திருவள்ளூரில் 454 பேரும், செங்கல்பட்டில் 354 பேரும், காஞ்சிபுரத்தில் 329 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் இறங்குமுகம்...
தமிழ்நாட்டின் 2-வது பெரிய நகரான மதுரையில் இன்று 106 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக 300,400 என தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், கடந்த 3 நாட்களாக அங்கு கொரோனா பாதிப்பு இறங்குமுகத்தில் உள்ளது.
மற்ற மாவட்டங்கள்...
தூத்துக்குடி - 220
நெல்லை - 180
திருவண்ணாமலை - 151
கோவை - 139
வேலூர் - 114
தேனி - 107
மற்ற மாவட்டங்களில் 100-க்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய மாவட்டமான ராணிப்பேட்டையில் 98 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.