tamilnadu

சென்னையில் கார் பயணத்தை பகிர்ந்து கொள்வது அதிகரிப்பு

சென்னை, ஜன.2- கார் பயணத்தை சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது சென்னையில் அதிகரித்து வருகிறது. 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது சென்னையில் கார் பகிர்வு சவாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   வாகனங்களைப் பகிர்வதன் மூலம் 2019-ம்ஆண்டில் 7800 டன் கார்பன் வெளி யேற்றத்தை அவர்கள் தடுத்துள்ளனர். நெரிசல் மற்றும் காற்றுமாசு பாட்டைக்குறை க்கும் நோக்கில் சென்னை பயனர்கள் 33லட்சம் சவாரிகளை நகரத்தில் உள்ள சக கார் பயணப் பகிர்வாளர்களுடன் வெற்றிகரமாக பகிர்ந்துள்ளனர். சென்னை பயனர்கள் 2019-ம் ஆண்டில் 7லட்சம் கி.மீ தூர கார் பயணத்தைப் பகிர்ந்துள்ளது இதில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் சுற்றுச்சூழல் மாசுபடு வதை தடுக்க தங்களால் ஆன பங்களிப்பை ஆற்றியுள்ளதாக இந்த சேவையை அறி முகப்படுத்திய குயிக் ரைய்டு கூறியுள்ளது.சென்னையில் உள்ள இதன்  பயனர்கள் தங்கள் சக கார் பகிர்வாளர்களுடன் சவாரி களைப் பகிர்ந்துள்ளனர். 

;