tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கலைஞர் உருவம் பொறித்த நாணயம் ஒன்றிய அரசு அனுமதி

சென்னை, ஜூலை 13- தமிழக முன் னாள் முதல்வர் கலைஞரின் நூற் றாண்டு நினைவாக, ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி’ என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. இதை யொட்டி ரூ. 100 மதிப்பிலான நினைவு நாணயத்தை வெளியிடுவதற்கு ஒன்றிய நிதி அமைச்சகத்திடம் கடந்தாண்டு கோரிக்கையும் விடுத்தது.

இந்நிலையில் கலைஞர் நினைவு நாணயத்திற்கான அனுமதி கோப்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கையொப்பம் இட்டதாக தகவல் வெளி யானது. அதன்படி கலைஞர் நூற்றாண் டையொட்டி 100 ரூபாய் நினைவு நாண யம் வெளியிடுவதற்கான அரசாணை ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியாகி யுள்ளது.

இதையடுத்து நாணயத்தின் ஒரு புறம் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த  நாள் நூற்றாண்டு 1924 – 2024’ என அச்சி டப்படும். மறுபுறத்தில் தேசிய நினைவுச்  சின்னத்துடன் ரூ. 100 என நாணயத்தின் மதிப்பும் குறிப்பிடப்பட உள்ளது.

பாமகவின் பொய் எடுபடவில்லை! அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை, ஜூலை 13- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தல் முடிவுகள்  குறித்து அமைச்சர் க.பொன்முடி கூறு கையில், “நடந்து முடிந்த இடைத்தேர்த லில் விக்கிரவாண்டி தொகுதி மக்கள்  பாமகவுக்கு சரியான பாடம் புகட்டி யுள்ளனர். அதிமுக தேர்தலில் போட்டி போடாவிட்டாலும் அவர்களுக்கும் சேர்ந்துதான் தோல்வி கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பேச்சை அதி முகவினரே கேட்பதில்லை என்பதற்கு விக்கிரவாண்டி தேர்தல் உதாரணம்” என்று தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முதல்வர் மு.க.  ஸ்டாலின் தான் காரணம். 3 ஆண்டு களில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்  களால் வெற்றி பெற்றிருக்கிறோம் என் றும் அமைச்சர் கூறினார்.

போதை ஒழிப்பு பிரச்சாரம்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜூலை 13- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல். திருமாவளவன் முகநூல் நேரலையில் பேசுகையில், “ஆக.17 ஆம்  தேதி ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு  கருப்பொருளை முன்வைத்து செயல்  திட்டத்தை அறிவிப்போம். இந்த ஆண்டு  மது உள்ளிட்ட போதைப் பொருள் ஒழிப்பு  என்பதை கருப்பொருளாக எடுத்துக் கொள்ள இருக்கிறோம். இதுகுறித்து செப்.17 வரையிலான ஒரு மாத காலத்  துக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்  கொள்ள இருக்கிறோம்” என்று அறி வித்துள்ளார்.

பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி அல்லது விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தப்படும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

மின்வாரியத்தைப் பிரிக்க ஒன்றிய அரசு ஒப்புதல்

சென்னை, ஜூலை 13- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்  மானக் கழகம் எனப்படும் ‘டான் ஜெட்கோ’வை, தமிழ்நாடு மின் உற் பத்திக் கழகம், தமிழ்நாடு பசுமை எரி சக்திக் கழகம் என இரண்டாக பிரிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், நிலக்கரி, டீசல், அணு அல்லது வேறு ஏதேனும் ஒத்த எரி பொருட்களை பயன்  படுத்தி மின் உற்பத்திப் பணியை  மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. அதேபோல், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம், காற்று, சூரிய ஒளி, உயிரி  எரிபொருள், கடல் அலைகள் உள்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

நிர்வாக ரீதியாக டான்ஜெட்கோ பிரிக்  கப்படும் நிலையில் மின்வினியோகம், மின் உற்பத்தியில் எவ்வித இடர்பாடும் இருக்கக்கூடாது என அரசு அறிவுறுத்தி யுள்ளது.

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

சென்னை, ஜூலை 13 - விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி, சென்னை  அண்ணா அறிவாலயத்தில் கொண்டா டப்பட்டது. இதில், முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின், மூத்த அமைச்சர் க. துரை முருகன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, துரைமுருகனுக்கு திடீர் உடல்  நலக்குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.