பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு
உடுமலை, மே 14- பொள்ளாச்சி பாலியல் வழக் கின் தீர்ப்பு என்பது, கடந்த காலத் தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும், என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் தெரிவித்துள் ளார். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குரல்குட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில், செவ்வாயன்று மாலை பொதுக்கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத் திய நபர்களை தண்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி, மாதர் சங் கம் மற்றும் அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தியது. ஆனால், நடவடிக்கை எடுக்காமல், அன் றைய ஆட்சியாளர்கள் குற்றவாளி களை காப்பற்றும் வகையில் செயல் பட்டனர். ஆனால், நம்முடைய தொடர் போராட்டத்தின் விளைவாக வழக் குப்பதிவு செய்து, பின்னர் மத்திய புலனாய்வு துறையின் விசார ணைக்கு சென்று, செவ்வாயன்று சிறப்பான தீர்ப்பு வழக்கப்பட்டுள் ளது. இது அனைவரின் போராட் டத்திற்கு கிடைத்த வெற்றியாக கரு தப்பட வேண்டும். இந்த வழக்கில் அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை மேலும் உயர்த்த வேண்டும். பாதிக் கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்தால், அதனை எதிர்கொண்டு தமிழக அரசு வழக்கை நடத்த வேண்டும்; கண்டிப் பாக மார்க்சிஸ்ட் கட்சி வழக்கை நடத்தும். நாட்டில் எந்த இடத்தில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், அவர் களுக்கு துணை நிற்பது மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே. இதற்கு பொள் ளாச்சி, வாச்சாத்தி வழக்குதான் சாட்சி. ஏழை மக்களுக்கு துணை என்றுமே கம்யூனிஸ்ட்கள் தான்.
போர் நிறுத்தம் குறித்து நாடளுமன்றத்தில் விவாதித்திடுக
கடந்த சில நாட்களாக ஒன்றிய அரசு பயங்கரவாதிகள் மீது தாக்கு தல் நடத்துகிறோம் என்று, பாகிஸ் தான் நாட்டின் மீதும், பயங்கரவாதி கள் முகாம் மீதும் தாக்குதல் நடத்தி யது. இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டதையும் கூட்டி சில நடவ டிக்கையை மேற்கொண்டது. ஆனால், இரண்டு நாட்களுக்கு மேல் பதற்றமாக இருந்த நிலையில், திடீ ரென்று போர் நிறுத்தம் என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சண் டையை நிறுத்துவாக அறிவிக்க வேண்டிய நமது பிரதமரோ அல் லது பாகிஸ்தான் தரப்போ எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. எல்லைக்கடுத்து இருக்கும் பயங்கரவாதிகளின் முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்த உத்தரவு செய்த மோடி, சுற்றலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை இன்று வரை கைது செய்ய வில்லை. போர் குறித்து இரண்டு முறை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா வெளியிட்டது ஏன் என்பது குறித்து விவாதிக்க நாடளுமன்ற சிறப்பு கூட் டத்தை உடனடியாக கூட்ட வேண் டும், என்றார்.
பாஜகவிற்கு தகுதியே இல்லை
மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளை பாதிக்கும் கொடிய சட்டங்களை திரும்பப்பெற ஒரு ஆண்டுக்கும் மேல் நடைபெற்ற போராட்டத்தில் 700க்கும் மேற் பட்ட விவசாயிகள் உயிர் நீத்தனர். இறந்த விவசாயிகளின் குடும்பத் தில் பெண்களின் நிலையை கண்டு கொள்ளாத மோடி அரசு, தன்னு டைய உளவுத்துறை தோல்வியை மறைக்க ‘தேச பாதுகாப்பு’ என்ற போலியான முகத்தை மக்க ளுக்கு காட்டி வருகிறது. இந்த தேசப்பற்றை, விரைவில் வரும் பீகார் மாநில தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற குறுகிய நோக்கில் பரப்பி வருகின்றனர். எந்த நாட்டில் போர் நடைபெற்றா லும், பாதிக்கப்படுவது ஏழை மக் கள் தான். போர் வேண்டாம் என் றால் தேச விரோதி என்று எங்களை சொல்வதற்கு யாருக்கும் அரு கதை கிடையாது. நாட்டின் சுதந்தி ரத்திற்கு உயிர் தியாகம் செய்த வர்கள், பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். எங்களுக்கு தேச பக்தி பாடம் எடுக்க பாஜகவிற்கு எவ்வித தகுதியும் இல்லை. மேலும், ஊரக வேலை திட்டத் திற்கு, கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். முறையாக சம்ப ளம் வழங்க வேண்டும். தமிழக அரசு, ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். தாது மணல் கொள்ளையை தடுக் கும் வகையில், மணல் குவாரி களை அரசே ஏற்று நடத்த வேண் டும், என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில், சிபிஎம் உடுமலை ஒன்றியச் செய லாளர் ஜெகதீசன், குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் சசிகலா, மடத்துக்குளம் தாலூகாக்குழு உறுப்பினர் எம்.எம்.வீரப்பன் மற் றும் குரல்குட்டை கிளைச் செயலா ளர்கள், மூத்த தோழர் கனகராஜ் உட் பட திரளானோர் கலந்து கொண்ட னர். முடிவில், புரட்சிநாதன் நன்றி கூறினார்.