ஈரோடு, பிப்.8- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தர பணியிடங் களை ஒழித்து புற ஆதார முறையில் ஒப்பந்த தொழிலாளர் நியமனத்தை கைவிடவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும் வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஈரோடு, சூரம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட துணைத் தலைவர் என்.முருகையா தலைமை வகித் தார். மாவட்ட தலைவர் எஸ்.சுப்ர மணியன், மாவட்ட துணைச் செய லாளர் கே.மாரப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகி கள் சி.ஜோதிமணி, கே.பிஜு, குண சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வி. பாண்டியன் நன்றி கூறினார். நாமக்கல் இதே கோரிக்கையை முன் வைத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கோவிந்தராஜ் தலைமை தாங்கி னார்.வெங்கடேஷ், பி.முனியப்பன், லோகேஷ், கு.சிவராஜ் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு நாமக்கல் மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி உரையாற்றினார்.