மேட்டூரில் 5 ஆடுகள் பலி
சேலம், மார்ச் 7- மேட்டூர் அருகே அடையாளம் தெரியாத விலங்கு கடித்ததில், ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவ சாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர், நங்கவள்ளி அருகே உள்ள சாணார்பட்டி கிராமம், கூலிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனியாண்டி (65). கால்நடை வளர்ப்பில் ஈடு பட்டு வரும் இவர், மேச்சலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த ஆடுகளை புதனன்று இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்துவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். இதன் பின் வியாழனன்று காலை வந்து பார்த்தபோது, அடை யாளம் தெரியாத விலங்கு கடித்து பட்டியிலிருந்த ஐந்து செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன. இச்சம்பவம் அப் பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது. மேலும், தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத விலங்கு, ஆடுகளை வேட்டையாடி வருவதால் பல ஆயி ரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் கவலை அடைந் துள்ள விவசாயிகள், இறந்து போன ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அப்பகுதியில் உலாவும் அந்த விலங்கினை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகளிர் தின விழிப்புணர்வு பேரணி
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோபிசெட்டிபா ளையத்தில் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் வழக்கு ரைஞர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. பெண்களின் பாதுகாப்பு, பெண் கல்வி, பெண்க ளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகள் பாது காப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடத்தப்பட்டது. “பெண்களுக்கு பாதுகாப்பு 1098”, “ஆண் பெண் சமம்”, “காவலன் செயலி” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பள்ளி, கல்லூரி மாணவிகள், வழக்குரைஞர்கள், காவலர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்ற பேரணி கோபி செட்டிபாளையத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இப் பேரணியை மாவட்ட கூடுதல் நீதிபதி தயாநிதி கொடிய சைத்து தொடங்கி வைத்தார். கச்சேரிமேடு, தினசந்தை, மொடச்சூர் சாலை சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது. சுமார் 100-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.
சிறுவனை மீட்ட போலீசார்
கோவை, மார்ச் 7- பெங்களூருவைச் சேர்ந்த 15 வயது சிறுவன், பெற் றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி கோவை பேருந்து நிலையத்தில் தவித்த நிலையில் போலீசா ரால் மீட்கப்பட்டார். கோவை காட்டூர் காவல் நிலைய பீட் காவலர் பால சுப்பிரமணியம், காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் ரோந்து சென்றபோது, பள்ளி சீருடையில் சிறுவன் ஒருவன் தவித்துக் கொண்டிருந்ததைக் கண் டார். விசாரணையில், அந்தச் சிறுவன் பெங்களூரு வைச் சேர்ந்தவர் என்பதும், பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சிறுவனுக்கு உணவு வாங்கி கொடுத்து, பெற்றோரின் செல்போன் எண்ணை பெற்று போலீசார் தகவல் தெரிவித்தனர். காலையில் கோவை வந்த சிறுவனின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி, சிறுவனை பத்திரமாக ஒப்படைத்தனர். இது குறித்து சிறுவனின் தந்தை நாகேஷ் கூறுகையில், “வியா ழனன்று பள்ளிக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நி லையில், கோவை போலீசார் என்னை தொடர்பு கொண்டு மகன் கோவையில் இருப்பதாக தெரிவித்தனர். மகனை பத்திரமாக மீட்டுக் கொடுத்த கோவை போலீசாருக்கு நன்றி,” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.