கோவை, ஜூன் 9- ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு கோவையில் 10 ஆயிரத்து 670 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கு 1,443 பேர் வரவில்லை. மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது அவசியம். தமிழகத்தில் இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. மேலும், கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி, இந்த தேர்வு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட் கள் நடைபெற்றது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆசிரியராக பணி யாற்ற முதல் தாள் தேர்வையும், 10ம் வகுப்பு வரை பணி யாற்ற 2-ம் தாள் தேர்வையும் எழுத வேண்டும். முதல் தாளுக் கான தேர்வு சனியன்று 16 மையங்களில் நடைபெற்ற நிலை யில், ஞாயிறன்று தேர்வு 32 மையங்களில் நடைபெற்றது. முதல் தாள் தேர்வுக்கு கோவை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 53 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 801 பேர் தேர்வு எழுத வரவில்லை. 5 ஆயிரத்து 252 பேர் எழுதினர். இதேபோல் ஞாயிறன்று நடைபெற்ற 2-ம் தாள் தேர்வுக்கு 12 ஆயிரத்து 133 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஆயிரத்து 443 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வினை 10 ஆயிரத்து 670 பேர் எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வுக்கு 10.20 வரை தேர்வு எழுதுபவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாற்றுத்திற னாளிகளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. தேர்வு மையத்தில் முதுகலை மற்றும் பி.எட் படித்த 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்காணிப் பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் தேர்வு மையங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. தேர்வு மையத்திற்குள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக் கப்படவில்லை.