கோவை, மே 5-நீட்தேர்வு மையத்தில் அதிகளவில் கெடுபிடிகள் இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்த மாணவர்கள் தயாரிப்போடு தேர்வு எழுத வந்தனர்.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை உட்பட 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு துவங்க இருக்கும் தேர்விற்காக 12 மணிக்கே தேர்வு மையங்களுக்குள் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவையில் 13 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் 13 ஆயிரத்து 324 மாணவமாணவிகள் தேர்வு எழுதினர். ஆதார் அட்டையும், 2 புகைப்படமும் இருந்தால் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டைப்போல் இந்த முறையும் நீட்தேர்வு மையத்தில் கெடுபிடிகள் அதிகம் இருந்தது. மாணவிகள் ஷால், ஹீல்ஸ்செருப்பு, காதணி மற்றும் வளையல் அணிய தடை விதிக்கப்பட்டது. இதேபோல் மாணவர்கள் முழுக் கை சட்டை மற்றும் பெல்ட் அணியதடை விதிக்கப்பட்டது. ஏற்கனவேஇரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளதால் தேர்வு மையத்தின்கெடுபிடிகள் குறித்து அறிந்திருந்ததால் முன்தயாரிப்போடு மாணவர்கள் வந்திருந்தனர். இருப்பினும் மாணவர் ஒருவர் முழு கை சட்டை அணிந்து வந்ததால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் அருகில் இருந்த சலூன் கடையில் கடைக்காரர் வைத்திருந்த கத்திரிகோல் மூலம் சட்டையின் கைகளை வெட்டி விட்டார். அதன் பின்னரே மாணவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.
சேலம்
இதேபோல் சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வு 17 மையங்களில் நடைபெற்றது. இதில் 17 ஆயிரத்து 389 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். முன்னதாக மாணவ, மாணவிகள் கடுமையான சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மாணவ, மாணவியர் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வந்து தங்களது பெற்றோர்களுடன் காத்திருந்து தேர்வு மையத்திற்கு சென்றனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு ஏராளமானமாணவ, மாணவிகள் தேர்வு எழுதிவந்திருந்தனர். மேலும் இந்த நீட் தேர்வு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.முன்னதாக, பெற்றோர்களுக்கு போதியளவு அடிப்படை வசதிகள் செய்து தராததால் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமலும் நிற்க இடமில்லாமலும் கடுமையான வெயிலில் சாலையோரம்காத்திருக்கின்றனர்.