tamilnadu

img

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பபெறக்கோரி பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் கூட்டமைப்பினர் கைது

கோவை,டிச.24 - குடியுரிமை சட்டதிருத்தத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை யில் பிஎஸ்என்எல் அலுவலக கத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்திய மாணவர்களை காவல் துறையினர் கைது செய்த னர்.  நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மாணவர் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் பல் வேறு போராட்டங்களைப் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டங் கள் கோவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதன்தொடர்ச்சியாக இந்திய மாணவர் சங்கம்,அனைத் திந்திய மாணவர் பெருமன்றம், சட்டக்கல்லூரி மாணவர்கள், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட மாணவர் இயக்கங்கள் ஒன்றிணைந்த மாணவர் கூட்ட மைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பின் சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட னர்.இதன்காரணமாக மாணவர்க ளுக்கும், காவல் துறையினருக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட் டது.இதனையடுத்து போராட்டத் தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா, மாண வர் பெருமன்றத்தின் மாநிலக்குழு உறுப்பினர்ரஞ்சினிகண்ணம்மா,  அபுதாகிர், எஸ்ஐஓ ஆரிப் உள் ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாண வர்கள் கைது செய்யப்பட்டனர்.  இதுகுறித்து மாணவர் சங்க நிர் வாகிகள் கூறுகையில், மாணவர் கள் போராட்டத்தினால் கல்லூரி களை வருகின்ற ஜன.2 ஆம் தேதி வரை மூடினாலும் இந்த சட்டத் தைத் திரும்ப பெறும் வரை  தொடர்ந்து போராடுவோம். எங் கள் போராட்டத்தை கொச்சைப் படுத்தி பேசிய நடிகர் ரஜினி காந்த், ஒய்ஜி.மகேந்திரன் போன்ற வர்களை வன்மையாக கண்டிக்கி றோம்.அடுத்தவர்களுக்கு அறி வுரை சொல்லும் முன்பு மாண வர்களின் போராட்டம் சரித்தி ரத்தை மாற்றியுள்ளது என்கிற வர லாற்றை இவர்கள் படிக்க வேண் டும் என ஆவேசமாக கூறினர்.