சிதம்பரம் வீனஸ் குழுமப்பள்ளிகளில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மேல் நிலைப் பள்ளியின் முதல்வர் ரூபியாள் ராணி தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ்போனிகலா வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ரூட்டாசண்முகம், மருத்துவர்கள் உமாராணி, வனிதாசாமுவேல், இன்னர் வீல் சங்கத்தின் சேவைக்காக கே.ஆர் நாராயணன் விருதுபெற்ற ஜெசிசைமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். வீனஸ் பள்ளிகளின் டிரஸ்டி உறுப்பினர் மருத்துவர் லியோனகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.