இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 2 உலகக்கோப்பை பெற்றுத்தந்தவருமான மகேந்திர சிங் தோனி இங்கிலாந்து உலகக்கோப்பை தொடருடன் விருப்ப ஓய்வு பெற்று ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். தோனியின் 2 மாத ஓய்வு, பெரும் விவாத பொருளாக மாறி கிரிக்கெட் துறையில் தொடர்பில்லாத நபர்கள் கூட விமர்சித்தனர். முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லு நர்கள் தோனிக்கு ஓய்வு அளிக்கக் கோரி போர்க்கொடி தூக்கினர். கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் கூட தோனியின் விருப்ப ஓய்வு பற்றி காரசாரமாக விவாதித்தார். ஆனால் தோனி ஓய்வு விசயத்தில் ஆதா யம் தேடிய இந்திய கிரிக்கெட் உலகம் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிகழ்வைக் கண்டு கொள்ளாமல் இருந்தது ஏமாற்றமளிக்கிறது. அந்த நிகழ்வு யாதெனில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடர் நிறைவு பெற்றவுடன் இந்திய அணி வங்கதேச அணிக்கெதிராக டி-20 மற்றும் டெஸ்ட் என இரண்டுவிதமான தொடர் களில் பங்கேற்கத் தயார் நிலையிலிருந்த பொழுது கேப்டன் விராட் கோலிக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து விளையாடிவருவதால் ஓய்வு வழங்கப்பட்டிருக்கலாம் என அனைத்து தரப்பி லும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டதில் உள்ளடி வேலைகள் அதிகம் இருந்தது. தற்போது வெட்ட வெளிச்ச மாகியுள்ளது. அதாவது வங்கதேச அணிக்கெதி ரான டி-20 தொடர் நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி நிறைவு பெறும் நிலை யில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் கோலியின் பிறந்த நாள் (நவ.,5) நிகழ்வு உள்ளது. வங்கதேச அணிக்கெதிரான தொடரில் பங்கேற்றால் தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் சந்தோ சமாகப் பிறந்த நாள் கொண்டாட முடியாது என்பதால் தேர்வுக்குழுவிடம் மறைமுகமாக ஓய்வு கேட்டிருக்கலாம் அல்லது தனது அதி காரத்தைப் பயன்படுத்தி வெளிப்படையாக ஓய்வு பெற்று மவுண்ட் எவரெஸ்ட் பகுதிக்குச் சென்றுள்ளார். பொதுவாகத் தவிர்க்க முடியாத காரணத்தி னால் தான் (பெற்றோர் இறப்பு, காயம்) இந்திய அணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற முடி யும் என்பதால் தோனி விருப்ப ஓய்வு எடுத்தது விதிமீறிய செயல் தான். தோனியும், கோலியும் சொந்த காரணத்திற்காகத் தான் ஓய்வு எடுத்துள் ளனர். ஆனால் தோனிக்கு மட்டும் குற்றம் சாட்டு வது போன்ற அழுத்தம் தரப்பட்டுள்ளது பாரபட்ச மானது.