tamilnadu

img

கொரோனா: அரசியல் கட்சிகள் உதவ உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை, ஏப்.16- கொரோனா பாதிப்பில் அர சியல் கட்சிகள், தன்னார்வலர்கள் முதல் விட திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனையுடன் அனு மதி உள்ளது. உலக நாடுகளையே புரட்டிப் போட்டு வரும் கொரோனா தொற்று நோய் தாக்கம் தமிழ கத்திலும் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் 17 நீட்டிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடை பிடிக்கவேண்டும் எனவே மக்கள் அனைவரும் தனிமைப் படுத்திக் கொள்வதே இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி என்று அரசு தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது.  ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ஏழை  எளிய மக்கள், சாலையோர வியா பாரிகள், தினக்கூலி தொழிலா ளர்கள், வெளிமாநில ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்கள் என பல ரும் பாதிக்கப்பட்டுள் ளனர். ஒரு  வேளை உணவுக்குக் கூட வழி யின்றி பல இடங்களில் திண்டாடி  வருகிறார்கள்.

அரசு ஆயிரம் ரூபாய் நிவா ரணம் அறிவித்தது போதுமானது  என்றால் நிச்சயம் இல்லை என்பதே அனைத்து தரப்பு மக்க ளின் ஒருமித்த குரலாகவே  இருக்கிறது. இந்நிலையில், வறிய நிலையில் உள்ள மக்க ளுக்கு அரசியல் கட்சிகளும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஆங்காங்கே தங்களால் முடிந்த பண உதவி யும் பொருளுதவியும் சாப்பாடும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தன்னார்வ லர்கள், அரசியல் கட்சிகள் நேரடி யாக உதவி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சமூக ஆர்வலர்கள் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் நான் நேரடியாக உணவு நீர் வைக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கும் தன்னார்வலர்கள் இருக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக என தமிழக அரசு விளக்கம் அளித்தது. இதற்கிடையில் திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த  வழக்கை அவசரமாக விசார ணைக்கு ஏற்றுக் கொண்ட நீதி மன்றம், இருதரப்பு வாதங்களை யும் கேட்டது. பின்னர் நீதிபதி கள், நிவாரண உதவிகள் வழங்க  3 பேர் மட்டுமே செல்ல வேண்டும்  என்றும் பொருட்களை விநியோ கிக்கும் முன்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், போதிய முன்னெச்சரிக்கையுடன் நிவாரண உதவி வழங்க நீதி மன்றம் எனவும் அறிவுறுத்தினர்.