states

img

ஹரியானாவில் தொடரும் புல்டோசர் பயங்கரம்

சண்டிகர், ஆக.6- ஹரியானாவில் கலவரத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் முஸ்லிம் வீடுகள், கடை கள், உணவகங்களை புல்டோசர் மூலம் தேடி தேடி அழித்து வரு கிறது ஹரியானா பாஜக அரசு. ஹரியானா மாநிலத்தின் நூஹ் பகுதியில் கடந்த திங்கள் கிழமையன்று இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். இப்பேரணியில் இஸ் லாமியர்களை எரித்து படு கொலை செய்த பசுக்காவலர் என தன்னை அறிவித்துக்கொள்ளும் மோனு மானேசர் பங்கேற்கக் கூடும் என செய்தி பரவியதால் வன்முறை வெடித்தது. மேலும் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கியதாக விஎச்பி குண்டர்கள் கடந்த ஒருவாரமாக நூஹ், குர்கான், பரிதாபாத், பல்வால் உள்பட 5 மாவட்டங்களில் வன் முறையை அரங்கேற்றி வரு கின்றனர். இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். வன்முறை சம்பவங்களில் ஈடு பட்டதால் கைது செய்யப்பட் டோர் எண்ணிக்கை 216 ஆகவும் அதிகரித்துள்ளது.

தொடரும் புல்டோசர் நடவடிக்கை

மோதல்களை தடுக்கிறோம் என்ற பெயரில் ஹரியானா பாஜக அரசு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் சொத்து களை புல்டோசர் மூலம் தொடர்ந்து 4-வது நாளாக இடித்து வருகிறது. ஆனால் இதில் மிகப்பெரும் பாரபட்ச நட வடிக்கை என்பது வெளிப்படை யாக இருக்கிறது. வன்முறையை அரங்கேற்றி வரும் இந்துத்துவா அமைப்பான விஎச்பி குண்டர் களின் சொத்துக்கள் பாதுகாக்கப் பட்டு, அப்பாவி முஸ்லிம் மக்க ளின் வீடுகள், கடைகள், உணவக ங்களை தேடி தேடி அழித்து வரு கிறது ஹரியானா பாஜக அரசு. இத்தொடர்பாக பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்துள்ள நிலை யில், இதுவரை 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன.

3 மாடி உணவகம் தரைமட்டம்

ஞாயிறன்று கல்வீச்சு சம்பவங் களுக்கு களமாக இருந்ததாகக் கூறி பிரம்மாண்ட உணவகம் ஒன் றையும் ஹரியானா மாநில அரசு அதிகாரிகள் புல்டோசர் மூலமாக இடித்து தரைமட்டமாக்கினர். இடிக்கப்பட்ட உணவகம் நூஹ் பகுதியில் உள்ள முஸ்லிம் நப ருக்கு சொந்தமான “சஹாரா” என்ற 3 மாடி கொண்ட பெரிய உணவகம் ஆகும். சட்டவிரோத மாக கட்டப்பட்டதாகவும், கல வரத்தின் பொழுது கற்கள் வீச  உணவகம் பயன்படுத்தப்பட்ட தாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த உணவகம் இடிக்கப்பட்ட பின்னர் ஹரியானாவில் தொடர்ந்து பதற்றச் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே 2 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக வங்க தேசத்தில் இருந்து குடியேறி யவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கி யது என்பது குறிப்பிடத்தக்கது. “கடந்த ஒன்பது வருடங் களாக நான் “சஹாரா பேமிலி” உணவகத்தை நடத்தி வரு கிறேன். ஆனால் நிர்வாகம் அநீதி  இழைக்கிறது. நூஹ்வில் மோதல் கள் வெடித்தபோது, எனது ஊழி யர்களை உணவகத்தை மூடச் சொன்னேன். நானும் எனது ஊழி யர்களும் பின்னால் உள்ள ஒரு காலனிக்கு சென்றோம். மேலும் மாவட்ட நிர்வாகம் காட்டிய வீடியோ எங்கள் உண வகத்திற்கு சொந்தமானது அல்ல.  அந்த உணவகம்  சோஹ்னாவில் உள்ளது. நான் காட்சிகளைக் காட்டினேன், ஆனால் யாரும் எங்கள் பேச்சைக் கேட்க வில்லை” என உணவக உரிமை யாளர் ஜாம்ஷெட் கண்ணீருடன் கூறினார். 

துணை ஆணையர் மழுப்பல்

“நூஹ் பகுதியில் தற்போது நிலைமை சாதாரணமாக உள் ளது. மாவட்ட கண்காணிப்பாள ரும், நானும் இரு சமூகத்தினரை யும் சந்தித்து பேசினோம். எதிர் காலத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று உறுதியளிக்கு மாறு அவர்களிடம் முறையிட்டுள் ளோம். சட்டவிரோத கட்டு மானத்திற்கு எதிராக இடிப்பு நட வடிக்கை நடந்து வருகிறது. அது தொடரும். ஆனால் யாரையும் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைதி யை நிலைநாட்டுவதே எங்கள் நோக்கம்.” என நூஹ் துணை ஆணையர் பிரசாந்த் பன்வார் கூறிக்கொண்டார்.

காவல்துறை, மாநில நிர்வாகம் உடந்தை?

“கலவரத்தால் பாதிக்கப் பட்ட நூஹ், மேவாட் மற்றும்  அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக் குச் சென்று எங்கள் (ஜாமியத்  உலமா-இ-ஹிந்தின் பிரதிநிதி கள்) குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது. இதில் மனதை உலுக்கும் வகையில் கல வரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது தெளிவாக வெளிவந்துள் ளது. இதில் காவல்துறை மற்றும் மாநில நிர்வாகத்தின் பங்கு உள்ளதோ என்று சந்தேகம் எழு கிறது” என ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா அர்ஷத் மதனி கூறியுள்ளார்.

இணையசேவை துண்டிப்பு

வன்முறையால் பாதிக்கப் பட்ட பகுதியில் 144 தடை உத்தர வும், வன்முறை மேலும் பரவா மல் இருக்க ஹரியானா மாநிலம்  முழுவதும் கடந்த 3 நாட்களாக இணையசேவை துண்டிக்கப் பட்டுள்ளது. இணையசேவை துண்டிப்பு ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு

கலவரத்தால் உருக்குலைந் துள்ள ஹரியானாவின் நூஹ்வில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிறன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை (3 மணி நேரம்  மட்டும்) அத்தியாவசிய சேவைக் காக ஊரடங்கை தளர்த்தினார் நூஹ் மாவட்ட ஆட்சியர்.

சிபிஐ குழுவுக்கு அனுமதி மறுப்பு

ஹரியானா மாநிலத்தின் நூஹ் மற்றும் குர்கான் பகுதியின் உண்மை நிலைமையை அறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலங்களவை எம்பி-க்கள் பினோய் விஸ்வம், சந்தோஷ் குமார், ஏஐடியுசி பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர், மூத்த தலைவர் தரியாவ் சிங் காஷ்யப் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழு ஞாயிறன்று நேரில் சென்றனர். ஆனால் ஆளும் பாஜக அரசு சிபிஐ  பிரதிநிதிகளை நூஹ் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தியது. “பாஜக ஆட்சியில் குண்டர்கள், பாசிஸ்டுகள் சுதந்திரமாக நடமாடலாம். ஆனால் நாங்கள் நூஹுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை, தடுக்கப்பட்டுள்ளோம். இதுதான் இன்றைய நாட்டின் அவலநிலை.  நடமாடும் சுதந்திரம் கூட தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் போராட்டம் நடத்த விரும்பினாலும்,  திரும்பிச் செல்ல முடிவு செய்துள்ளோம்” என சிபிஐ மாநிலங்களவை எம்பி பினோய் விஸ்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தில்லியில் பதற்றம்

ஹரியானாவின் பானிபட்டில் முகமூடி அணிந்த இந்துத்துவா கும்பல் கோழி இறைச்சி கடை மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.  பானிபட் தில்லிக்கு அருகில் உள்ள நிலையில், தில்லியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.ஹரியானாவில் அரங்கேறிய வன்முறை தில்லிக்கும் பரவ வாய்ப்புள்ளது என ஏற்கெனவே எச்சரிக்கை தகவல் வெளியாகிய நிலையில், தற்பொழுது பானிபட்டிலும் வன்முறை அரங்கேறியுள்ளதால் தில்லியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.