ஹரியானா மாநிலம் நூஹ் மாவட் டத்தில் கடந்த ஜூலை 31 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் ஊா்வ லத்தின்போது இந்துத்துவா குண்டர் கள் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சை கட்டவிழ்த்து விட்டனர். இதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க நூஹ்வில் வன்முறை வெடித்தது. நூஹ் மாவட்டத்திற்கு அருகில் உள்ள குர்கான் மாவட்டத்துக் கும் வன்முறை பரவிய நிலையில், இந்த வன்முறையில் 6 போ் உயிரிழந்தனர். சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீக்கி ரையாக்கப்பட்டன. வன்முறை தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த நூஹ் வன்முறை வெடிக்க மூளையாக செயல்பட்ட பிட்டு பஜ்ரங்கி ஹரியானா பாஜக பிரச்சா ரக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரிதாபாத் என்ஐடி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பா ளர் சதீஷ்குமாருக்காக நடைபெற்ற பேரணியில் உத்தரப்பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒன்றிய அமைச்சர் கிரிஷன் பால் பங்கேற்றனர். இவர்களுடன் பிட்டு பஜ்ரங்கியும் சிறப்பு விருந்தினராக மேடையில் இருந்தார். பிரச்சார மேடையில் ஆதித்யநாத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிட்டு பஜ்ரங்கி, பாஜக வேட்பாளரை ஆதரிப் பதாக கூறி கொக்கரித்தார். பசு பாதுகாவ லரான பிட்டு பஜ்ரங்கி மீது நூஹ் வன்முறை வழக்கும், பல்வேறு கொலை வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.