states

img

உ.பி.யில் ஏழாம் கட்டத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

லக்னோ, மார்ச் 7- உத்தரப்பிரதேசத்தில் திங்களன்று ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு திங்கள் காலை 7 மணிக்கு தொடங்கி  நடைபெற்றது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.   ஆறுகட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீத மிருந்த ஒன்பது மாவட்டங் களான அசம்கர், மௌ, ஜான் பூர், காஸிபூர், சண்டௌலி, வாரணாசி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா ஆகிய மாவட்டங்களில் இறுதி கட்டத் தேர்தல் நடைபெற்றது. உள்ள 54 தொகுதிகளில் மொத்தம் 613  வேட்பாளர்கள் களத்தில் உள் ளனர். இதில் 2.06 கோடி  பேர் வாக்களிக்க தகுதி பெற்ற வர்கள் ஆவர். மொத்தம் 403 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. திங்களன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை யிலிருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.  பிற்பகல் மூன்று மணி வரை 46 சதவீத வாக்குகள் பதிவாகி யிருந்தன. தேர்தல் முடிவு மார்ச் 10-ஆம் தேதி (வியாழனன்று) வெளியாகிறது.