தலைமை அர்ச்சகர் பேட்டி
லக்னோ, ஜன.25- உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்க ளாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலை யில், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், அயோத்தி தொகுதியில் போட்டியிடுவார் என்று தக வல்கள் வெளியாகின. ராமர் கோயில் கட்டுவதன் வெற்றியை பறைசாற்றும் வகையில், ஆதித்யநாத் அயோத்தியில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்று பாஜகவினரும் கட்சித் தலைமைக்கு கடிதங்களை எழுதினர். ஆனால், திடீரென ஆதித்யநாத் அவரது சொந்த மாவட்டமான கோரக்பூர் தொகுதியிலேயே போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியானது. “இந்நிலையில்தான், அயோத்தியில் ஆதித்யநாத் போட்டியிடாதது நல்லதுதான்” என்று ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “அயோத்தியில் ஆதித்யநாத் போட்டி யிடாதது நல்லதுதான். ஏனெனில் இங்கு பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட உள்ள தையொட்டி உள்கட்டமைப்புத் திட்டங்க ளுக்காக இந்தப் பகுதியில் உள்ள வர்களின் வீடுகள் மற்றும் கடைகள் அப்பு றப்படுத்தப்பட்டன. இதனால் வீடுகளை யும் கடைகளையும் இழந்தவர்கள் ஆதித்ய நாத்துக்கு எதிராக திரும்பியுள்ளனர். மேலும், ஆதித்யநாத் அயோத்தி யில் போட்டியிடுவது தொடர்பாக இங்குள்ள துறவிகளுக்கும் மாற்றுக் கருத்துகள் உள்ளன. இதன் காரணமாக அவர் அயோத்தியில் போட்டியிடாமல் கோரக் பூரில் போட்டியிட வேண்டும் என்று நான்தான் பரிந்துரைத்தேன். கடவுள் ராமரும் இதையே என்னிடம் கூறினார்” என்று சத்யேந்திர தாஸ் குறிப்பிட் டுள்ளார்.