states

img

கருத்துக் கணிப்பு மூலம் போலியான பிம்பத்தை உருவாக்க முயற்சி!

லக்னோ, ஜன.25- கருத்துக் கணிப்புகள் என்ற பெய ரில் தவறான தகவல்களை அளித்து, மக்களைத் திசைத்திருப்பும் முயற்சி நடப்பதாக, சமாஜ்வாதி கட்சித் தலை வர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இதுவரை ஏபிபி நியூஸ் - சிவோட்டர், ‘இந்தியா டிவி’, ‘ரிபப் ளிக் டிவி - பி மார்க்’, ‘நியூஸ் எக்ஸ் - போல்ஸ்டிராட்’, ‘டைம்ஸ் நவ் - வீட்டோ’, ‘ஜி - டிசைன்பாக்ஸ்டு’, ‘இந்தியா நியூஸ் -ஜன் கி பாத்’ ஆகிய  7 செய்தி நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்த 7 நிறுவனங்களுமே சராசரி யாக பாஜக கூட்டணி 235 முதல் 249 தொகுதிகளைப் பெற்று ஆட்சி யைப் பிடிக்கும், சமாஜ்வாதி கூட்டணி 137 முதல் 147 தொகுதிகள் அளவி லேயே பெறும் என்று முடிவுகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையிலேயே கருத்துக் கணிப்புகள் மூலம் பாஜக மீது மக்க ளுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி நடப்பதாக சமாஜ்வாதி தலை வர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார். “ஊடகங்கள் நடத்தியது ஒப்பினி யன் போல் அல்ல; அவை ஓபியம் போல்கள். அரசு நடத்தும் நிகழ்ச்சி களுக்கு பொது மக்கள் வருவதில்லை. பாஜக வேட்பாளர்கள் துரத்தி அடிக் கப்படுகின்றனர். இருந்தாலும் பாஜக வுக்கு சாதகமான இந்தக் கணிப்பு கள் தனக்கு ஆச்சரியம் அளிக்கின்றன. மக்களுக்கு தவறான தகவல்களை அளிப்பதற்காகவே கருத்துக்கணிப்பு கள் நடத்தப்படுவதாக தெரிகிறது” என்று  அகிலேஷ் கூறியுள்ளார். “பணவீக்கம் குறித்தோ, வேலை யின்மை குறித்தோ பாஜகவிடம் ஊட கங்கள் கேள்வி எழுப்புவதில்லை” என் றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.