states

img

பண்ணை வீட்டில் பாலியல் வக்கிர விடுதி நடத்திய மேகாலயா மாநில பாஜக தலைவர் கைது!

லக்னோ, ஜூலை 27- பண்ணை வீட்டில் பாலியல் வக்கிர விடுதி  நடத்தி வந்த, மேகாலயா மாநில பாஜக துணைத்  தலைவர் பெர்னார்ட் மராக்கை உத்தரப் பிர தேச போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக, மேகாலயா காவல்துறை பெர்னார்ட் மராக்கிற்கு எதிராக ‘லுக் அவுட்’  நோட்டீஸை வெளியிட்டது. அவர் கண்டுபிடிக் கப்பட்டால், அனைத்து மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று  அந்த நோட்டீஸில் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையிலேயே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டத்தில் செவ் வாயன்று இரவு 7.15 மணியளவில் பாஜக தலை வர் மராக் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேகாலயா மாநில பாஜக துணைத் தலை வராக இருப்பவர் பெர்னார்ட் மராக். கேரா  ஹில்ஸ் பகுதி சுயாதீன மாவட்டக் கவுன்சிலின்  உறுப்பினராகவும் இருக்கிறார். இவருக்கு மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ ஹில்ஸ்  மாவட்டத்தின் துராவில் ஒரு பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில், சிறுமி ஒருவர் பாலி யல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதமே புகார் எழுந்தது. இந்த பின்  னணியில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி போலீசார்  அங்கு சோதனை நடத்தினர்.

அப்போது, பாஜக தலைவரின் பண்ணை  வீட்டில் பாலியல் வக்கிர விடுதியே நடந்து  வந்தது கண்டறியப்பட்டது. அங்கு பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் மற்றும்  50 ஆண்கள் உட்பட 73 பேரை ஒரே இடத்தில்  வைத்து கைது செய்த போலீசார், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறுமிகளை யும் மீட்டனர். மேலும், அந்த பண்ணை வீட்டில் இருந்து 400 மதுபான பாட்டில்கள் மற்றும் 500 ஆணுறைகள் அடங்கிய பெட்டிகளும் கைப்பற்றப்பட்டன. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மேகாலயா உள்ளூர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பித்த  நிலையில், பாஜக தலைவர் பெர்னார்ட் மராக்  தலைமறைவானார். போலீசார் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையிலேயே, செவ்வாய்க்கிழமை இரவு 7.15 மணிக்கு ஹபூர் மாவட்டத்தில் வாக னத்தில் பயணம் செய்து கொண்டிருந்த மராக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

மராக்கின் பண்ணை வீட்டில் பாலியல்  வக்கிர விடுதி நடந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில்  மராக் குற்றமற்றவர் என்று பாஜக அவருக்கு  சான்றிதழ் அளித்துள்ளது. முதல்வர் கான்ராட்  சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி  (என்பிபி) மூலம் தனது புகழைக் கெடுக்க திட்ட மிடப்பட்ட சதி நடந்து வருவதாக மராக் கூறிய  நிலையில், மேகாலயா மாநில பாஜக தலைவர்  எர்னெஸ்ட் மாவ்ரியும் அதனை வழிமொழிந்துள்  ளார். பாஜகவினருக்கு எதிராக அரசியல்  சதி நடப்பதாக ஆவேசப்பட்டுள்ளார். பொ்னார்டின் இந்த குற்றச்சாட்டை மறுத்த  துணை முதல்வா் பிரிஸ்டோன் டிசாங், “சட்டம்  அனைவருக்கும் சமம். எந்தக் கட்சியாக இருந்  தாலும், அரசுக்கு ஆதரவாக இருந்தாலும் இல்லையென்றாலும் சட்டம் கடமையைச் செய்யும். மோசமான சம்பவங்கள் நடைபெற் றுள்ளன. போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.