லக்னோ, ஜூலை 11- கன்வர் யாத் திரை நடைபெறும் வழித் தடங்களில் திறந்தவெளியில் இறைச்சி விற்ப தற்கு உத்தரப்பிர தேச பாஜக அரசு தடை விதித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கன்வர் யாத் திரை ஜூலை 14-ஆம் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெறும். சிவ பக்தர்கள், கங்கை நதிக் கரைகளுக்கு யாத்திரை யாக சென்று புனித நீர் எடுத்து வந்து தங் கள் சொந்த ஊர் மற்றும் வீட்டில் உள்ள சிவன் சிலைக்கு அபிஷேகம் செய்வர். இதுவே கன்வர் யாத்திரை எனப்படு கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து அண்மையில் நடந்த கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆலோ சனை மேற்கொண்டார். அப்போது, கன்வர் யாத்திரை நடை பெறும் வழித்தடத்தில் போக்குவரத்து தடைகளை அகற்ற வேண்டும். மின்வசதி கள், சுகாதார வசதிகள் மற்றும் முதலு தவி வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண் டும் என்று கூறியதுடன், யாத்திரை வழித் தடத்தில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடைவிதித்து காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். இதையடுத்து கன்வர் யாத்திரை நடைபெறும் வழித் தடத்தில் திறந்த வெளியில் இறைச்சி விற்க வேண்டாம் என வியாபாரிகளிடம் போலீசார் தெரி வித்துள்ளனர். இறைச்சி வியாபாரி களும் அதற்கு ஒப்புக்கொண்டிருப்ப தாக கூறப்படுகிறது.