லக்னோ, மார்ச் 28- பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் முஸ்லிம்கள், சிறுபான்மையினர், தலித் மக்க ளுக்கு பாதுகாப்பில்லா சூழல் உருவாகி யுள்ளது. சகிப்பின்மை, வெறுப்புப் பேச்சு, வன்முறை தூண்டுதல், பசுக்குண்டர்களின் அட்டூழியம் என பல்வேறு வன்முறை சம்ப வங்கள் அரங்கேறி வருகின்றன. சமீப கால மாக தேர்தல் நடக்கவிருக்கும் கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநி லங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பட்டியலில் தற்போது உத்தரப்பிர தேசம், மத்தியப்பிரதேச மாநிலங்களும் இணைந்துள்ளன.
பழைய வீடியோவை வைத்து வன்முறைப் பிரச்சாரம்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த 2021-ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் பொது இடங்க ளில் அனைத்து மத நடவடிக்கைகளையும் தடை செய்து உத்தரவிட்டார். இதனை ஒரு கருப்பொருளாக கொண்டு லக்னோ சமஸ் கிருத பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மைதானத்தில் காஷ்மீர் மாணவர்கள் திறந்த வெளியில் தொழுகை நடத்துவதாக இதற்கு முன் தொழுகை நடத்தும் பழைய வீடியோ வை சமூக வலைதளங்களில் பரப்பி வன்முறை யை அரங்கேற்றும் முயற்சியில் இந்துத்துவா அமைப்பான “இந்து மகாசபா” முயற்சித்து வருகிறது. மேலும் “இந்து மகாசபா” மத வெறி கோஷங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் “இந்து மகாசபா” பொரு ளாளர் தினேஷ் சர்மா கூறியதாவது,” சமஸ் கிருத பல்கலைக்கழகத்தில் 82 காஷ்மீரிகள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் வளா கத்தில் திறந்த வெளியில் தொழுகை நடத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை யென்றால் ஹனுமான் சாலிசாவை சமஸ்கிருத பல்கலைக்கழகத்திலும், நகரத்தில் உள்ள மசூதியிலும் பாடுவோம்” என வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு
லக்னோ சமஸ்கிருத பல்கலைக்கழகத் தின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் (பெயரை கூற மறுத்துவிட்டார்),” பல்கலைக்கழக சீரு டையில் ஏழு மாணவர்கள் வளாகத்தில் திறந்த மைதானத்தில் தொழுகை செய்யும் மிகவும் பழைய வீடியோவை “இந்து மகாசபை” பரப்பி வருகிறது. எங்கள் நிறுவனம் பொறியியல், மருத்துவம் மற்றும் மனிதநேயம் போன்ற வற்றை சிறந்த சூழ்நிலையில் வழங்கும் புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகம். எங்களின் சிறந்த கல்வி முயற்சியை சிலர் தடம் புரள முயற்சிக்கின்றனர்” எனக் கூறினார்.சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் மற்றொரு நிர்வாக அதிகாரி விவேக் ஸ்ரீவஸ்தவா கூறுகை யில், “சிலர் பழைய வீடியோவை காட்டி இங்கு தினமும் திறந்த வெளியில் தொழுகை நடத்தப் படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது ஆதார மற்றது மற்றும் தவறானது” எனக் கூறி யுள்ளார்.
உத்தரப்பிரதேசம்: தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள பர்கான் கிராமத்தில் பசு வைக் கொன்றதாக கூறி தலித் இளைஞர்கள் மீது இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள் ளது. அந்த வீடியோவில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டே,”யோகி (உத்தரப்பிரதேச முதல்வர்) இருக்கும்போது இப்படிதான் நடக்கும்” என்று கூறி தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.
மத்தியப் பிரதேசம்: மசூதிக்குள் கற்களை வீசிய இந்துத்துவா அமைப்பினர்
மத்தியப் பிரதேசம் மாநிலம் காண்ட்வா வில் உள்ள தெமிகுர்டில் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே சாதாரண வாக்குவாதம் நடந்துள்ளது. அதில் ஒரு குழு வில் முஸ்லீம் இளைஞர்கள் இருந்துள்ளனர். இதனை வைத்து முஸ்லீம் இளைஞர்கள் இந்து இளைஞர்களை தாக்கியதாக இந்துத்துவா அமைப்பினர் வன்முறையை தூண்ட வன் முறை வெடித்தது. அப்பகுதியில் உள்ள குறைந்த அளவு முஸ்லீம் மக்கள் மீது இந்துத் துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் வீடுகள் மீது கற்களை வீசினர். இந்துத் துவா அமைப்பினரின் இந்த வெறியாட்டத்தில் முஸ்லீம் இளைஞர் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். தொடர்ந்து முஸ்லிம்கள் மசூதிக்குள் தொழுகை நடத்தும் போதும் இந்துத்துவா அமைப்பினர் கற்களை வீசி தாக்கினர். தொழு கையில் இருந்த பலர் படுகாயமடைந்ததுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி
சம்பவம் குறித்து விசாரணைக்கு வந்த போலீசார் முஸ்லிம் மக்கள் மீது தடியடி நடத்தி னர். இதுதொடர்பாக உள்ளூர் முஸ்லீம் மக்கள் கூற்றுப்படி,”நாங்கள் எங்களை பாதுகாக் கவே காவல்துறையை அழைத்தோம். ஆனால் போலீசார் அவர்களின் புகாரைக் கூட கேட்கா மல் எங்கள் மீது தடியடி நடத்தினர். வீட்டின் கதவுகளை உடைத்து இளைஞர்களை இழுத்துச் சென்றனர்” எனக் கூறினர்.