பிரியங்கா காந்தி அறிக்கை
லக்னோ, ஜன.19- “கடந்த 5 ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்புகள் எதையும் அளிக்காத உத்தரப் பிரதேச பாஜக அரசுக்கு, இளைஞர்கள் தங்கள் வாக்குகள் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும்!” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது அறிக்கை யில் பிரியங்கா காந்தி மேலும் கூறி யிருப்பதாவது: உத்தரப் பிரதேசத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 16.5 லட்சம் இளை ஞர்கள் வேலை இழந்துள்ளனர். 4 கோடி மக்கள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையையே இழந்துள்ள னர். ஆதித்யநாத் அரசு, ஐந்து ஆண்டு களில் உத்தரப் பிரதேசத்தின் கல் விக்கான பட்ஜெட்டில் பெரியளவில் கை வைத்துள்ளது. நிதியைக் குறைத்துள்ளது. இந்த நிதி ஒதுக் கீடு பட்ஜெட்டில் அதிகமாக இருந்தி ருந்தால், இளைஞர்களுக்கு புதிய பல்கலைக்கழகங்கள், இணையம், உதவித்தொகை, நூலகங்கள் மற் றும் தங்கும் விடுதிகள் கிடைத்திருக்கும். ஆனால் இவை பற்றியெல்லாம் ஆதித்யநாத் பேச மறுக்கிறார். பேசினால், அவரது ஆட்சி பற்றிய உண்மை வெளிப்பட்டுவிடும் என் பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவே, அன்பு இளைஞர்களே, வேலையின்மைதான் உ.பி. தேர்த லின் உண்மையான நிகழ்ச்சி நிரல். நீங்கள் வேலையின்மை பற்றி ஆதித்யநாத்திடம் கேள்விகளைக் கேளுங்கள். உங்களைத் தவறாக வழி நடத்தியவர்களுக்கு உங்கள் வாக்குகள் மூலம் தக்க பதிலடி கொடுங்கள். இவ்வாறு பிரியங்கா காந்தி கூறி யுள்ளார்.