states

img

பிரதமர் மோடி பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துகிறார்

ராஜஸ்தானில் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்  தல் நடைபெறும் நிலை யில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என பெரும்  பாலான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், ராஜஸ்தானின் பாலி பகுதியில் நடந்த பிரச்சாரப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்  கவுரவ் வல்லப், “மற்ற மாநிலங்க ளைவிட ராஜஸ்தானில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதி கரித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதற்குக் கார ணம் என்னவென்றால், ராஜஸ்தா னில் புகார் கொடுக்க வருபவர் களின் அனைத்து புகார்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று  காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்க ளில் பெரிய குற்றங்கள் நடந்தால் கூட எப்ஐஆர் எதுவும் பதிவு செய  யப்படுவதில்லை.

காங்கிரஸ் பாலியல் வன் கொடுமை செய்பவர்களை ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஆனால்  பாஜக பாலியல் வன்கொடுமை  செய்பவர்களை ஆதரிக்கிறது. பிரிஜ் பூஷன் வழக்கில் பாஜக எப் படி நடந்துகொண்டது என்பதை யாரும் மறக்க முடியாது. இந்தியா வுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்று  கொடுத்த மல்யுத்த வீராங்கனை கள், பாஜகவைச் சேர்ந்த எம்.பி.  பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கொடுத்தனர். ஆனால் மோடி  மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆத ரவாக நிற்கவில்லை. குற்றம்சாட் டப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கை பாது காப்பதில் மட்டுமே அவர் அக்கறை  செலுத்தினார். பிரதமர் மோடி ஏன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆத ரவாக நிற்கவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.