மும்பை, ஜூலை 9- பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு, உத்தவ் தாக்கரே தலை மையிலான ‘மகா விகாஸ் அகாதி’ அரசைக் கவிழ்த்த ஏக்நாத் ஷிண்டே தற்போது மகாராஷ்டிர முதல்வராகி உள்ளார். 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்ப தால், சிவசேனா கட்சியே தாங்கள் தான் என்று அவர் கூறிவருகிறார். இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே அணியினர், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இடைத் தேர்தலைச் சந்திக்கத் தயாரா? என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா தலை வருமான உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார். மும்பை மாதோஸ்ரீயில் பத்திரி கையாளர்களுக்கு பேட்டி அளித் துள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:
சட்டத்தின்படி யாராலும் சிவ சேனாவின் வில், அம்பு சின் னத்தை பறிக்க முடியாது. சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்த பிறகுதான் நான் இதை கூறு கிறேன். மக்கள் வாக்களிக்கும் போது கட்சியின் சின்னத்தை மட் டும் பார்ப்பது இல்லை. வேட்பா ளர் யார், அவர் சிவசேனாவை சேர்ந்தவரா என்றுதான் பார்ப் பார்கள். சிவசேனா கட்சி வேறு. சட்டப்பேரவை கட்சி வேறு. இரண்டுக்கும் வெவ்வேறு அடை யாளங்கள் உள்ளன. ஒன்று, 50 அல்லது 100 எம்எல்ஏ-க்கள் சென்றால் கூட கட்சி அழியாது. சட்டப்பேரவைக் கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு வெவ் வேறு அடையாளங்கள் உள் ளன. யாராலும் கட்சியின் தொண்டர்களை அவர்களுடன் எடுத்துச் செல்ல முடியாது. எனது தலைமையிலான அரசு கவிழ மக் கள்தான் அனுமதிக்க வேண்டும். இடைத்தேர்தலை நடத்த வேண் டும். நாங்கள் தவறு செய்தால், மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும். எனவே உங்களுக்கு தைரியம் இருந்தால் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெறுங்கள். இவ்வாறு உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.
அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனாவில் இணைய பாஜகவுடன் பேச வேண்டுமா?
அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் சிவசேனாவில் இணைய வேண்டுமானால், உத்தவ் தாக்கரே பாஜக வுடன்தான் பேச வேண்டும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி யைச் சேர்ந்த தீபக் கேசர்கர் கூறியிருந்தார். “கட்சியில் இந்த பிளவு ஏற்பட காரணமாக இருந்தவர்களிடம் (சஞ்சய் ராவத்) இருந்து உத்தவ் தாக்கரே சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். நாங்களும், பாஜகவும் தற்போது இணைந்து உள் ளோம். அவர் (உத்தவ் தாக்கரே) எங்களை அழைக்கும் போது, அவர் பாஜகவுடனும் பேச வேண்டும். எங்களை வாழ்த்த வேண் டும்” என்று தீபக் கேசர்கர் குறிப்பிட்டிருந்தார். இதற்கும் உத்தவ் தாக்கரே பதிலளித்துள்ளார்.
“கடந்த 2 ஆண்டுகளாக பாஜக எங்கள் குடும்பத்தையும், என்னையும் அவதூறாக பேசிய போது நீங்கள் (அதிருப்தி அணி) அமைதியாக இருந்தீர்கள். நீங்கள் பாஜக-வுடன் தொடர்பில் இருந்து சொந்தச் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள். நீங்கள் என் மீதும், எனது குடும்பம் மீதும் வைத்திருந்த பாசம் நிஜம்தானா? என்ற கேள்வி எழுகிறது. தாக்கரே குடும்பத்தை மோசமாக விமர்சித்த வர்கள் அருகில் நீங்கள் உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள். அவர்களைக் கட்டி அணைக்கிறீர்கள். அவர்கள் எனது மகனின் வாழ்க்கையை சீரழிக்க முயற்சி செய்தவர்கள்.
எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. 16 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சிவசேனாவுக்கு மட்டுமல்ல, ஜனநாயகம் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதையும் தீர்மானிக்க உள்ளது. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூற உள்ளது என்பதை நாடே பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஏனெனில் அந்தத் தீர்ப்பு நாட்டில் வருங்காலத்தில் ஜனநாயகம் எவ்வாறு இருக்கும் என்பதைக் காட்ட உள்ளது. அந்த தீர்ப்பின் மூலம் நாட்டில் ஜனநாயகத்தின் 4 தூண்களும் சரி யாக அதன் வேலையை செய்கிறார்களா என்பதையும் காட்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப் படும்” இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.