states

ரூ.1000கோடி சொத்துக்கள் ஏலம்

மும்பை, டிச.26- போலி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில்  6,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வைர வியாபாரி நீரவ் மோடி மீது, சி.பி.ஐ., அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள் ளன. கடந்த, 2017 இல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய அவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவர் வாங்கிய கடனை ஈடு செய்யும் வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அந்த சொத்துக்கள் விடு விக்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஏலம் விடும் நடவடிக்கை யில் வங்கி ஈடுபட்டுள்ளது. அதன்படி தற்போது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை விடு வித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் காலா கோடா பகுதியில் உள்ள பாரம்பரியமிக்க ‘ரிதம் ஹவுஸ்’ என்ற இசைக் கருவிகள் விற்கும் நிலையம் செயல்படும் கட்டடம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.