டாடா சன்ஸ் குழுமத்தின் முன் னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதனன்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரத்தன் டாடா மறைவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழில திபர்கள், திரைத்துறையினர், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரத்தன் டாடாவின் தைரியமான அணுகுமுறை மற்றும் சமூக அர்ப்ப ணிப்புக்காக அவரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறி வித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவில் வியாழனன்று ஒருநாள் துக்கம் அனு சரிக்கப்படும் என்றும், அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவ தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை நாரிமன் பாய்ண்ட் பகுதியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ரத்தன் டாடாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடி போர்த்தப்பட்டுள்ள ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள், திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் பிறகு வோர்லியில் ரத்தன் டாடாவின் இறுதி நிகழ்ச்சி அரசு மரியாதையுடன் நடைபெற்றது.