மும்பையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
மும்பை, செப்.2- ‘இந்தியா’ கூட்டணி பலம் பெற்று வருவதைக் கண்டு மோடி அரசாங்க மும், பாஜகவும் ஆட்டங்கண்டிருக் கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். மும்பையில் நடைபெற்றுவரும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி நிறைவுரை யாற்றினார். அப்போது அவர் கூறி யதாவது: இங்கு நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணியில் மேலும் இரு கட்சி கள் தங்களை இணைத்துக் கொண் டுள்ளன. மேலும் பல கட்சிகள் இதில் இணையவும் இருக்கின்றன. இவ் வாறு ‘இந்தியா’ கூட்டணி விரிவ டைந்துகொண்டிருக்கிறது. மாநில அளவில் கட்சிகளுக்கி டையே தொகுதி உடன்பாடுகள் குறித்து முடிவெடுத்திருக்கிறோம். இது மாநிலத்திற்கு மாநிலம் வேறு படும். ஆயினும் ஒட்டுமொத்த அள வில், நாங்கள் அனைவரும் ஒன்று பட்டிருக்கிறோம். குடியரசைப் பாது காப்பதற்காக, அதன் அடிப்படை அம்சமான, மதச்சார்பற்ற ஜனநாய கக் குணாம்சங்களைப் பாதுகாப்ப தற்காக, குறிப்பாக, அரசமைப்புச் சட்டம் நாட்டின் குடிமக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்கள், அவர்கள் எந்த மதத்தினராக இருந்தா லும், எந்த இனத்தினராக இருந்தா லும், எந்த சாதியினராக இருந்தா லும், எந்தப் பாலினத்தவராக இருந் தாலும், அனைவரும் சமம் என்று அளித்துள்ள உத்தரவாதங்களைப் பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டிருக்கி றோம். இதனை நிறைவேற்ற வேண்டு மானால் தற்போது ஆட்சியில் அமர்ந் துள்ள பாஜகவை அந்த இடத்திலி ருந்து அப்புறப்படுத்திட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் இங்கே ஒன்றுபட்டு நிற் கின்றோம்.
கின்றோம். நாங்கள் முதலில் பெங்களூரில் கூடிய போது, மீண்டும் தேசிய ஜன நாயகக் கூட்டணியை அமைக்க பாஜக முயன்றது. இப்போது மும்பை யில் கூடுகிறபோது, சமையல் எரி வாயுவின் விலையை 200 ரூபாய் குறைத்திருக்கிறது. அடுத்து நாடா ளுமன்றத்தின் சிறப்பு அமர்வினை வரும் 18ஆம் தேதியன்று கூட்டி இருக்கிறார்கள். அதில் என்ன செய்ய இருக்கிறார்கள் என்பது இனிமேல் தான் தெரியவரும். மதச்சார்பற்ற கட்சிகளாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதைக் கண்டு மோடி அரசாங்கமும், பாஜக வும் ஆடிப்போய் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும். ‘இந்தியா’ வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறது என்பதற்கு இது ஓர் அடையாளமா கும். இதனை மேலும் கெட்டிப்படுத்து வதற்காக நாடு முழுதும் ‘இந்தியா’ சார்பில் கூட்டங்களை நடத்தி, மக்க ளிடம் செல்ல முடிவு செய்திருக்கி றோம். நாம் ஏற்கனவே மக்களுடன் தான் இருந்து வருகிறோம். எனி னும் நம் கொள்கைகளையும், முடிவு களையும் மக்களிடம் எடுத்துச் செல் லக்கூடிய விதத்தில் இவற்றை நடத் திட இருக்கிறோம். வரவிருக்கும் காலங்களில் மேலும் பல கட்சிகள் ‘இந்தியா’ வுடன் இணைய இருக்கின்றன. அவை அனைத்தையும் ஒருமுகப் படுத்தி இந்தியாவைப் பாதுகாத்திடு வோம். பின்னர் இந்தியாவை மாற்றி அமைத்திடுவோம். இதுவே நாம் மக்களுக்கு அளித்திடும் உறுதி மொழியாகும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி நிறைவுரையாற்றினார்.