மும்பை, பிப். 21 - முஸ்லிம்கள் மீது வெறுப்பைப் பரப்பும் வகையில் தயாரிக்கப்பட்ட ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு, ஒன்றிய பாஜக அரசு, ‘தாதா சாகேப் பால்கே’ விருதைத் தூக்கிக் கொடுத்துள்ளது. ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பாஜக ஆதரவாளரான விவேக் அக்னி ஹோத்ரி இயக்கி, பாஜக-வைச் சேர்ந்த அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. 2022 மார்ச் 11 அன்று வெளியான இந்தப் படம், காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்டுகள் கொல்லப்பட்டதையும், அவர்கள் வெளியேற்றப்பட்டதையும் கதைக்களமாகக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இந்தப் படம் ஒரு வர லாற்றுப் புரட்டை செய்வதாகவும், உண்மையை மறைத்து முஸ்லிம்களை கொடூரமானவர்களாக சித்தரித்து, இந்து - முஸ்லிம்களை துண்டாடுகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படக்குழு வினரை நேரில் அழைத்துப் பாராட்டி னார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ சிறப்பான படம் என்றும், ஆனால் அதனை இழிவு படுத்தும் சதி நடக்கிறது; எனவே, நாம் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் பேசி, இந்த படத்திற்கு மிகப்பெரிய விளம்பரத்தை அளித்தார். அவரின் பாராட்டைத் தொடர்ந்து, பாஜக ஆட்சி நடக்கும் அசாம், ஹரி யானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த படத்திற்கு வரி விலக்கு அளித்தன. அரசு ஊழியர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு விடுமுறையும் வழங்கின. பாஜக முதல்வர்கள் சிறப்புக்காட்சி களுக்கும் ஏற்பாடு செய்தனர். இதனால், 25 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
எனினும், சர்வதேச அரங்கில் இந்தத் திரைப்படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. சிங்கப்பூர் இத்திரைப் படத்தைத் திரையிடவே மறுத்து விட்டது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெற இருந்த ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநரின் நிகழ்ச்சி, கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022 நவம்பரில், கோவா-வில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎப்எப்ஐ - IFFI) “‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரை யிடப்பட்டபோது, இஸ்ரேல் நாட்டின் புகழ்பெற்ற இயக்குநரும், திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவருமான நாடவ் லேபிட், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரையிடுவதற்குத் தகுதியற்ற இழிவான திரைப்படம்” என்று விழா மேடையிலேயே பகிரங்கமாக அறி வித்தார். “தி காஷ்மீர் பைல்ஸ்’ வெறுப் புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக் கப்பட்ட இழிவான திரைப்படம். மதிப்புமிக்க இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் திரைப் படம் எங்கள் அனைவருக்கும் (தேர்வுக் குழு உறுப்பினர்கள்) அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தருகிறது. இது ஒரு மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலைப்போட்டி பிரிவுக்குப் பொருத்தமற்ற, அருவருக்கத்தக்க, பிரச்சார திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது” என்று நாடவ் லேபிட் கூறினார்.
அண்மையில் திருவனந்தபுரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், “‘காஷ்மீர் பைல்ஸ்’ என்ற படத்தைப் பார்த்து விட்டு சர்வ தேச கலைஞர்கள் துப்பினார்கள். இந்த லட்சணத்தில் ‘காஷ்மீர் பைல்ஸ்’ படத்தின் இயக்குநர், ‘எனது படத்துக்கு ஏன் ஆஸ்கர் கொடுக்கவில்லை?’ என்று கேட்கிறார். ‘ஆஸ்கர்’ இல்லை ‘பாஸ்கர்’ விருது கூட, அவருக்குக் கிடைக்காது” என்று கிண்டலடித் திருந்தார். இந்நிலையில்தான், சர்வதேச அளவில் கடும் விமர்சனத்திற்கு உள் ளான, இந்துக்களையும் முஸ்லிம்களை யும் மத அடிப்படையில் துண்டாடுவதை நோக்கமாக கொண்டு தயாரிக்கப் பட்டிருந்த ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத் திற்கு, மும்பையில் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது விழாவில், சிறந்த படத் துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த விருதை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், என்னை ஆசிர்வதித்த இந்திய மக்கள் அனை வருக்கும் அர்ப்பணிப்பதாக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி புளகாங்கிதப் பட்டுள்ளார்.