states

img

தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்!

கிரண் ரிஜிஜூ-வுக்கு தலைமை நீதிபதி பதிலடி

மும்பை, டிச. 19 - உலகம் முழுவதும், அரசாங்கம்தான் நீதிபதிகளை நியமிக்கிறது என்றும், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் மட்டும் தான் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் வழக்கம் உள்ளது என்றும் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். உச்ச நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை விசாரிக்கக் கூடாது என்றும், அரசிய லமைப்புச் சட்ட விவகாரங்களை மட்டுமே  விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறி யிருந்தார். இந்நிலையில், மும்பை கருத்தரங்கில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். “1975-ஆம் ஆண்டு அவசர நிலையின் போது மங்கலாகிப்போன சுதந்திர ஜோதியை எரிய வைத்தது ரானே போன்ற  நீதிபதிகள்தான். அவசர நிலை காலத்தில்,  நீதிமன்றங்களின் ‘சுதந்திரம் குறித்த  அச்சமற்ற உணர்வு’தான், ஜனநாய கத்தைக் காப்பாற்றியது. நமது நீதிமன்றங் களின் பாரம்பரியத்தின் அடிப்படையில், நீதிபதிகள் ஒன்றுகூடி உறுதியான நிலை பாட்டை எடுத்ததன் காரணமாகவே நமது  இந்திய ஜனநாயகம் இன்று உறுதியுடன்  நிலைத்து நிற்கிறது. நமது நீதிமன்றங்கள் தான் சுதந்திரத்தின் ஒளிவிடும் ஜோதியாக திகழ்கின்றன. இனிமேலும் அப்படியே அவை நிலைத்து நிற்கும்” என்று கூறி யுள்ளார். மேலும், “உச்ச நீதிமன்றத்திற்கு சிறிய வழக்கு பெரிய வழக்கு என்றெல்லாம் இல்லை. அரசியலமைப்புச் சட்ட பாதுகாவ லர் என்ற வகையில், இந்திய குடிமக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது. தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுமானால், அந்த விஷயங்களில் தலையிடுவது உச்ச  நீதிமன்றத்தின் கடமை. இந்த நம்பிக்கை யை நாங்கள் பெற்றிருக்கிறோம். அதனை தொடர்ந்து பாதுகாப்போம்” என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரி வித்துள்ளார்.