states

img

ராமர் கதாபாத்திரத்தை வைத்து நாடகம் நடத்திய 7 மாணவர்களுக்கு தலா ரூ.1.2 லட்சம் அபராதம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஐஐடி-யில் கடந்த மார்ச் 31 அன்று கலாச்சார விழா நடைபெற்றது. இந்த விழா வில் “ராஹோவன்” என்ற தலைப்  பில் நாடகம் ஒன்றும் நடத்தப்பட்  டது. ராமாயணத்தை அடிப்படை யாகக் கொண்ட இந்த நாடகத்தில்  ராமரை தவறாக சித்தரித்ததாக வும், ராமருக்கு வழங்கப்பட்ட கதா பாத்திரம் சர்ச்சையை ஏற்படுத்திய தாக கூறி, நாடகம் நடத்திய மாண வர்களின் குழுவின் 7 மாணவர்  களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம்  மற்றும் இடைநீக்க நடவடிக்கை யை கையிலெடுத்துள்ளது மும்பை  ஐஐடி நிர்வாகம். 

ரூ.1.2 லட்சம் அபராத தொகை  கிட்டத்தட்ட ஒரு செமஸ்டர் கட்ட ணத்திற்கு சமம் என்ற நிலையில், சில மாணவர்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நாட கத்தில் பங்கேற்ற மாணவர் களுக்கு ஜிம்கானா விருதுகளிலி ருந்து எந்த அங்கீகாரத்தையும் பெறுவதற்கு தடை விதிக்கப்பட் டுள்ளது என மும்பை ஐஐடி நிர்வா கம் வழங்கிய ஒழுங்கு நடவடிக்கை  நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த அபராதத்தை மீறினால்  மேலும் பல்வேறு தடைகளை எதிர்  கொள்ள நேரிடும் என மும்பை  ஐஐடி நிர்வாகம் எச்சரிக்கையை யும் விதித்துள்ளது.

மாணவர்களை மிரட்டியதா மும்பை ஐஐடி நிர்வாகம்

ராமர் கதாபாத்திரம் மூலம் நாட கம் நடத்திய மாணவர்கள் மீது மும்பை ஐஐடி நிர்வாகம் கடந்த மே மாதம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இந்த விவ காரம் தொடர்பாக கடந்த 2 மாத  காலமாக எவ்வித தகவலும் வெளி யாகவில்லை. புதனன்று ஒழுங்கு நடவடிக்கை பெற்ற மாணவர் ஒரு வர் சமூகவலைத்தளம் கூறிய தக வலின் அடிப்படையிலேயே இந்தி யன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்த  தகவலை செய்தியாக வெளியிட் டுள்ளது. மாணவர்களை மிரட்டி இந்த விவகாரத்தை வெளியே கொண்டு செல்லாமல் ஐஐடி நிர்வா கம் மூடி மறைத்ததா? என்ற சந்தே கம் வலுத்துள்ளது.

புகார் இல்லாமல் நடவடிக்கை

நாடகத்தில் பங்கேற்ற மாணவர் ஒருவர் கூறுகையில்,”நாடகத்தை ராமாயணத்தின் மாற்றப்பட்ட பாத்திரப் பெயர்கள் மற்றும் கதைக்  களத்தின் “பெண்ணிய” மறுவிளக் கம் ஆகும். இந்த நாடகம் தொடர்  பாக பார்வையாளர்களும் எதிர்க்க வில்லை, நடுவர்களும் எதிர்க்க வில்லை. பிறகு ஏன் ஐஐடி நிர்வா கம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது  என்று தெரியவில்லை” என்று அவர் கூறினார். 

ராமர் கதாபாத்திரத்தை வைத்து  நாடகம் நடத்திய 7 மாணவர் களுக்கு தலா ரூ.1.2 லட்சம் அப ராதம் விதித்த மும்பை ஐஐடி-யின்  செயலுக்கு நாடு முழுவதும் கண்ட னம் வலுத்து வருகிறது.