states

img

முதல்வர் பைரன் சிங் பேச்சு எதிரொலி

பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலம் கடந்த ஒன்றரை வருடமாக வன்முறையால் பற்றி எரிந்து கொண்டி ருக்கும் நிலையில், இந்த வன்முறை யால் மாநிலம் முழுவதும் 220க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வரும் நிலையில், 2 நாட்களுக்கு முன் அம்மாநில பாஜக முதல்வர் பைரன் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில்,”நான் செய்யும் செயல்கள் அனைத்தும் மணிப்பூருக்கு நன்மை தரக்கூடியது ஆகும். அதனால் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்” எனக் கூறினார்.

பைரன் சிங்கின் இந்த ஆணவப் பேச்சிற்கு குக்கி இனமக்களின் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலை யில், மணிப்பூரில் அடுத்தகட்ட வன்மு றைச் சம்பவங்கள் தொடங்கியுள்ளன. ஞாயிறன்று மாலை சுராசந்த்பூர் மாவ ட்டத்தின் பெனியல் கிராமத்தில் உள்ள மாநில பாஜக செய்தி தொடர்பாளர் மைக் கேல் லாம்ஜாதங்கின் வீட்டையும், வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களையும் 20 பேர் கொண்ட மர்மக் கும்பல் தீ வைத்து கொளுத்தியது. லாம்ஜாதங்கை குறி வைத்தது நடத்தப்பட்ட 3ஆவது தாக்கு தல் இதுவாகும். இதே போன்று மேலும் சில வன்முறை சம்பவங்கள் சுராசந்த்பூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.