states

img

மகாராஷ்டிராவில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய பாஜக எம்எல்ஏ

பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிராவின் நாக்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் மோகன் மேட், தனதுஆதர வாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாகக் கூறி, நாக்பூர் நகர உதவி ஆய்வாளரான ஷியாம் கனோஜியா மீது ஆதரவாளர்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். பொது இடத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் ஷியாம் நாக்பூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில்,”மோகன் மேட் எம்எல்ஏ, எனது வீட்டு உரிமையாளர் மற்றும் ஏழு பேர் கொண்ட கும்பல் வியாழனன்று இரவு என்னை தாக்கியது. போலீஸ் உடையில் இருந்த என்னை காலரைப் பிடித்து பாஜக எம்எல்ஏ துஷ்பிரயோகம் செய்தார்”  என புகாரில் கூறப்பட்டுள்ளது. பதிலுக்கு ஷியாம் கனோஜியா மீது,”தவறு செய்ப வர்களை பாதுகாக்கிறார். அதனால்  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாஜக எம்எல்ஏ மோகன் மேட்டும் காவல்  ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். பாஜக எம்எல்ஏ அளித்த புகாரை மட்டுமே காவல் ஆணையர் ஏற்றுக்கொண்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக எம்எல்ஏவின் தாக்குதல் மற்றும் காவல் ஆணையரின் செயல்பாடு மூலம் மகாரா ஷ்டிராவில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பது நிரூபண மாகியுள்ளது.