states

ஆர்எஸ்எஸ் தொடர்பு கோசாலைக்கு 35 ஏக்கர் அரசு நிலமா?

பெங்களூரு, ஜூலை 16 - பாஜக ஆட்சியில் கோசா லைக்கு 35 ஏக்கர் நிலத்தை தான மாக வழங்கும் முடிவை, கர்நா டக முதல்வர் சித்தராமையா அதிரடியாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் தொடர்பு டைய அமைப்பு ஜனசேவா அறக் கட்டளை ஆகும். இந்த அமை ப்பு கோசாலை நடத்தி வரும் நிலையில், கர்நாடகத்தில் நடை பெற்று வந்த பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் தொட ர்புடைய, இந்த ஜனசேவா அறக்கட்டளைக்கு 35.33 ஏக்கர் அரசு நிலத்தை தானமாக வழங்கியது. கோசாலையில் இருக்கும் பசுக்களுக்கான மேய்ச்சல் நிலம் என்ற பெயரில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அவசர அவசரமாக இந்த நிலத்தை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்நிலையில், கர்நாட கத்தில் சித்தராமையா தலைமை யிலான காங்கிரஸ் ஆட்சி புதி தாக பொறுப்பேற்ற பின்னணி யில், அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதில், தேர்தலு க்கு முன்னதாக அறக்கட்டளை களுக்கு வழங்கிய நிதி,  நிலம் தொடர்பான உத்தரவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்து, தேர்தலுக்கு முன்பு  இருந்த நிலை தொடரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, பாஜக ஆட்சி யில் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய ஜனசேவா அறக்கட்டளைக்கு 35.33 ஏக்கர் மேய்ச்சல் நிலம் தானத்தை நிறுத்தி வைத்து, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடகத்திலிருந்து பாஜக-வின் அழிவு துவங்கிவிட்டது

இதனிடையே முதல்வர் சித்தராமையா, பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதி லளித்து சட்டப்பேரவையில் பேசியுள்ளார். அதில், பாஜக-வை யாராலும் அசைக்க முடியாது என்று வீராப்பு பேசி வந்தவர்களுக்கு கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்  முடிவு சரியான பாடம் கற்பித்துள்ளதுடன் அக்கட்சியின் அழிவுக்கான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். “கர்நாடக மாநிலம் அனைத்து சாதி, மதம், மொழி, இன மக்கள் கூடி வாழும் அமைதி  பூங்காவாகும். மனிதர்களை மனிதர்களாக பார்க்க வேண்டும். மனிதநேயம் வளர வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மத நூல்களும் போதிக்கின்றன. மனிதர்களுக்கு இடையில் வேற்றுமை சுவர் அமைப்பது, மதங்கள் இடையில் மோதல் போக்கை உரு வாக்குவது, வகுப்பு கலவரம் தூண்டுவது, மனிதநேய செயலாகுமா?  வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் மீது தான் நமது ஜனநாயக கட்டமைப்பு அமைந்துள்ளது. அதை ஏற்று கொண்டுள்ளவர்கள் நாங்கள். ஏதோ ஒரு சாதி, மதத்திற்கு ஆதரவாக இல்லாமல், அனைத்து வகுப்பினரையும் அன்புடன் நேசிக்கும் குணம் கொண்டவர்கள். நாங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு தலை வணங்குவோமே தவிர வேறு எதற்கும் தலைவணங்க மாட்டோம். நாங்கள் தான் பாரத தாயின் மக்கள் என்று சொன்னவர் களுக்கு கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பாடம் கற்று கொடுத்துள்ளது.  காலம் ஒரே மாதிரி  சுழன்று கொண்டிருக்காது. கர்நாடகாவில் பாஜக-வை காப்பாற்ற பிரதமர் மோடி மேற் கொண்ட முயற்சியை மக்கள் முறியடித்து விட்டனர். பாஜக-வுக்கான தோல்வி அத்தியாயம் கர்நாடகாவில் இருந்து தொடங்கியுள்ளது. இனி வரும் தேர்தல்களில் பாஜக-வுக்கு தோல்வி யையே மக்கள் பரிசாக கொடுப்பார்கள். பிரதமர் மோடியின் மாயஜால பேச்சுக்கள், செயல்களை மக்கள் நம்ப மாட்டார்கள்” என்றும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.