பெங்களூரு, டிச.13- கர்நாடக மாநிலத்தில், கிறிஸ்தவ மதப் பிரசுரங்களை பறித்து தீவைத்து எரித்த சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் நகரி லுள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ பாதிரி யார்கள், இந்துக்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதாக கூறி, இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டு உள்ளது. கிறிஸ்தவர்கள் வீடு, வீடாகச் சென்று மத போதனை செய்வது வழக்கமாக உள்ள நிலையில், அதன்படியே கோலா ரிலும் அவர்கள் போதனையில் ஈடு பட்டுள்ளனர். மதப் பிரசார புத்தகங்க ளையும் விநியோகம் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த இந்துத் துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், போதனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்க ளைத் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் இருந்த புத்தகங்களை பறித்து, அவற் றுக்குத் தீ வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இது வரை ஒருவரும் கைது செய்யப்படாத நிலையில், கட்டாய மதமாற்றத்தை தடுப்பது தொடர்பாக, சட்டப்பேரவை யின் குளிர்காலக் கூட்டத்தொடரில் விவா திக்கப்படும் என்றும், இது மாநிலத்தில் பரவலாகி வரும் கட்டாய மதமாற்றங் களைத் தவிர்க்கும் என்றும் பாஜக-வைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். தூண்டுதல்கள் காரணமாக நடக்கும் மத மாற்றங்களைத் தடுப்ப தற்காக மட்டுமே இந்த மசோதா என்று ரொம்ப நல்லவர் போல கூறியிருக்கும் பொம்மை, மற்ற மாநிலங்களில் இது தொடர்பாக இயற்றப்பட்ட சட்டங்களை ஆய்வு செய்த பிறகே கர்நாடகத்தில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்பு வதாகவும் தெரிவித்துள்ளார்.