states

ஷிமோகா பஜ்ரங்தள் பிரமுகர் கொலை முன்விரோதம் காரணம்?

பெங்களூரு, பிப்.21- ஷிமோகா மாவட்டத்தின் சீகேஹாட்டி பகுதி பாரதி காலனி யைச் சேர்ந்த பஜ்ரங் தளத்தை சேர்ந்த ஹர்ஷா (26) ஞாயிறு இரவு  பத்து மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப் பட்டார். இதனையடுத்து மெக்கேன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து வாகனங்கள் மீது கல் வீசப்பட்டது. வாக னங்கள் எரிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் ஷிமோகா நகரம் மற்றும் பத்ராவதி நகரத்தில் ஷிமோகா மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இச்சம்பவம் குறித்து கூறுகையில், “ஹர்ஷா ஓர் இந்து மத செயற்பாட்டாளர். அவர் ஆர்எஸ்எஸ் தன்னார்வலராக இருந்தார்.

ஷிமோகா மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்சம் பவத்தில் குற்றவாளிகள் தண்டி க்கப்படுவார்கள். காவல்துறை உரிய நடவடிக்கைஎடுக்கும். என்றார். ஹிஜாப் தொடர்பாக இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி க்கு “ஹிஜாப் தொடர்பான கொலை அல்ல”  என தெளிவு படுத்தினார். இந்த சம்பவத்தில் நான்கு அல்லது ஐந்து பேர்  ஈடுபட்டுள்ளனர். கொலையான வர் மீதும் ஓரிரு வழக்குகள் உள்ள தாக தகவல் உள்ளது என்றார். இதற்கிடையில் காவல் உயர் அதிகாரி ஒருவர், கூறுகையில் “இந்த சம்பவத்துக்கும் கர்நாடக ஹிஜாப் விவகாரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஹர்ஷா மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே முன்  விரோதம் இருந்ததாக நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று தெரி வித்துள்ளார். காவல்துறை கண்காணிப்பா ளர் பி.எம்.லட்சுமி பிரசாத் செய்தி யாளர்களிடம் கூறுகையில், இந்தச் சம்பவத்தின் பின்னணி யில் உள்ளவர்களைக் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள் ளது என்றார்.