states

img

தேர்தலில் மனச்சாட்சியோடு வாக்களியுங்கள்...

பெங்களூரு, மே 9- கர்நாடக மாநிலத்தில் (பாஜக அரசின்)  40 சதவிகித கமிஷன் பல ஒப்பந்ததாரர்களின் உயிர்களை பறித்துள்ளதால், மக்கள் அனை வரும் மனசாட்சியுடன் வாக்களிக்குமாறு கர்  நாடக ஒப்பந்ததாரர்கள் பரபரப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கர்நாடகத்தில் அரசுத் திட்டப்பணிகளை எடுத்துச் செய்வதற்கு, ஆளும் பாஜக அமைச் சர்கள், எம்எல்ஏ-க்கள் 30 முதல் 40 சதவிகி தம் வரை கமிஷன் கேட்டு கட்டாயப்படுத்து வதாக கடந்த 2021-ஆம் ஆண்டு கர்நாடக மாநில  ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தனர். ஆனால், பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அரசு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்து வதற்கு 40 சதவிகிதம் கமிஷன் கேட்டதாக ஊரக  வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது குற்றம்  சாட்டியிருந்த அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்  தோஷ் பாட்டீல், தங்கும் விடுதியில் தற் கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்  தனது நண்பர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்ஆப் குறிப்பில், தன் இறப்புக்கு அமைச்சர் கே.எஸ்.  ஈஸ்வரப்பாதான் காரணம் என குறிப்பிட்டி ருந்தார். இவ்வளவுக்கும் சந்தோஷ் பாட்டீல்,  ஹிந்து வாஹினி என்ற சங்-பரிவார் அமைப்  பின் தேசிய செயலாளர் என்பது குறிப்பி டத்தக்கது. இவருக்கு முன்பும் ஒரு காண்ட்ராக்  டர் தற்கொலை செய்து கொண்டார். அவரும்  40 சதவிகித கமிஷன் பற்றி குறிப்பிட்டிருந்தார். கடந்த 15 நாட்களாக கர்நாடக தேர்தல் பிரச்சாரத்திலும் இந்த கமிஷன் விவகாரம் எதி ரொலித்தது. 40 சதவீத கமிஷன் அரசு என்று  கர்நாடக பாஜக அரசை, காங்கிரஸ் விமர்சித்  தது. இதற்கு நேரடியாக பதில் சொல்லாத பிர தமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சியில் 85 சதவிகிதம் கமிஷன் பெறப்பட்டதாக கூறி, 40 சதவிகித கமிஷனை நியாயப்படுத்தினார்.

இந்த பின்னணியில்தான், புதன்கிழமை யன்று கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்  கான வாக்குப்பதிவு துவங்கவுள்ள நிலையில், கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  அதில், “எங்கள் மாநிலத்தில் ஊழல் அச்சு றுத்தும் நிலையை எட்டி உள்ளது. அரசு திட்டங்  களில் 40 சதவிகித கமிஷன் காரணமாக ஏற்கெ னவே பல ஒப்பந்ததாரர்கள் தங்கள் உயிரை பறி கொடுத்துள்ளனர். பொதுமக்களும் குறைபாடு உள்ள உயிருக்கு ஆபத்தான உட்கட்டமைப்புகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்று குறிப்பிட்டு இருப்பதுடன், “மக்கள் தங்கள் மனசாட்சிக்கு ஏற்ப வாக்களிக்கும் போதே ஜனநாயகம் தழைத்தோங்கும், ஊழலோ நமது மன சாட்சியை பெரும் காயப்படுத்தும்” என்றும் கூறியுள்ளன. ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் இந்த கடைசி நேர அதிரடி பாஜகவுக்கு அதிர்ச்சியை அளித்  துள்ளது.