states

img

பயங்கரவாத நடவடிக்கையின் பகுதி என்கிறார் கர்நாடக டிஜிபி

மங்களூரு, நவ.20- கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் சனிக்கிழமை மாலை ஆட்டோவில் மர்ம  பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவி லும் தீப்பிடித்தது. இந்த விபத்  தில் ஆட்டோ ஓட்டுநரும், ஒரு  பயணியும் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மூத்த  காவல்துறை அதிகாரி களும், தடயவியல் நிபுணர் களும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கைப்  பற்றப்பட்டது. இதனால் குக் கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து மங்களூரு காவல் ஆணையர் என்.சசி குமார் கூறுகையில் “சனிக்  கிழமை மாலை 5.15 மணியள வில் பயணி ஒருவர் பயணம் செய்த ஆட்டோவில் தீ பிடித்தது. இதில் ஆட்டோ  ஓட்டுநருக்கும்  தீக்காயம் ஏற்  பட்டுள்ளது. ஆட்டோவில் பயணம் செய்தவர் ஹூப் பள்ளியைச் சேர்ந்த பிரேம்  ராஜ் என்பவர் என கண்டறி யப்பட்டுள்ளது. அவருக்கு 40 சதவீத தீக்காய பாதிப்பு கள் உள்ளன என்றார். பிரேம்ராஜ் வைத்திருந்த பையில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறிய காவல்துறையினர்  பையில் சில கம்பிகள் (சர்க்  யூட்கள்) மற்றும் பிரஷர் குக்  கர் இருந்தது என்றனர். இந்த நிலையில், ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் விபத்து அல்ல என கர்நாடக காவல் துறைத் தலைவர் பிரவீன் சூட் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஆட்டோவில் மர்ம பொருள்  வெடித்தது தற்செயலாக நடைபெற்ற விபத்து அல்ல. பெரிய பாதிப்பை ஏற்படுத் தக் கூடிய பயங்கரவாதச் செயல். இது தொடர்பாக ஒன்றிய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வரு வதாக” தெரிவித்துள்ளார். உளவுத்துறை தோல்வி மங்களூரு குண்டு வெடிப்பு உளவுத்துறையின் தோல்வியை அம்பலப் படுத்தியுள்ளது, உள்துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்க  வேண்டும். மக்கள் பீதியடைய வேண் டாம். சந்தேகத்திற்குரிய நபர்  கள் குறித்து காவல்துறைக்கு  தகவல் தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்த ராமையா தெரிவித்துள்ளார்.