states

img

கோயில்களில் அரசின் கட்டுப்பாட்டை விலக்குவது வரலாற்றுப் பிழை!

பெங்களூரு, டிச. 31 - கர்நாடகத்தில் இந்துக் கோவில் கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விடுவிக்கப்படும் என்று முதல் வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள் ளார்.  இதற்காக, கர்நாடக சட்டப்பேரவை யின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே சட்டம் கொண்டு வரப்படும் என்றும் பாஜக செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். இந்நிலையில், “இந்துக் கோவில் களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்குவது வரலாற்றுப் பிழை” என்று பாஜக அரசின் முடிவுக்கு, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.  சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பாஜக-வினர் வரலாற்றுத் தவறை செய்கின்றனர்.

ஒரு துறையையோ அல்லது அரசு கோவில்களையோ எப்படி உள்ளூர் மக்களுக்கு நிர்வாகத் திற்காக கொடுக்க முடியும்? இது  அரசாங்கத்தின் சொத்து. கோவில் கள் மூலம் கோடிக்கணக்கில் வரு வாய் வருகிறது. வேறு சில மாநிலங் களைப் பார்த்து அவர்கள் இந்த அர சியல் நிலைப்பாட்டை எடுக்கப் பார்க் கிறார்கள் என்று டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். கர்நாடகத்தில் 34 ஆயிரத்து 563  கோவில்கள், இந்து சமய அறநிலை யத்துறையின் கீழ் உள்ளன. இதில் ஆண்டுக்கு ரூ. 25 லட்சத்திற்கும் அதிக மாக வருவாய் வரக்கூடிய ‘ஏ’ பிரி வில் 207 கோவில்கள் உள்ளன. ரூ. 5  லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை வரு வாய் வரும் ‘பி’ பிரிவில் 139 கோவில் களும், ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக வருவாய் வரும் ‘சி’ பிரிவில் 34 ஆயி ரத்து 217 கோவில்களும் உள்ளன. இவற்றை அரசிடமிருந்து பிரித்து தங்க ள்வசம் கொண்டுவந்துவிட வேண்டும்  என்பது விஎச்பி உள்ளிட்ட இந்து த்துவா அமைப்புகளின் நீண்டகால விருப்பமாக உள்ளது.